மேலும் அறிய

Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கழிவறை, விளையாட்டு திடல், முதலுதவி பெட்டி, மின்விசிறி, முறையான குடிநீர் வசதி, காற்றோட்டமான சுற்றுச்சூழல், இவை அனைத்துமே முறையாக இல்லை.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் அருகே உள்ளது சேரகுளம், விவசாயிகள் நிறைந்த இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 35 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகென தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் உள்ளனர். இப்பள்ளியின் கட்டிடம் மிகுந்த சேதமானதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்று வருகிறது.


Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக தற்காலிக வாடகை வீடு ஒன்றில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த தற்காலிக வாடகை வீடானது முறையான அனுமதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இயங்கி வருகிறது. மேலும் அந்த தற்காலிக வாடகை வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அதன் சுவர்களில் விரிசல் விட்டுள்ளது. இடிந்து விழும் தருவாயில் இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.


Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

மேலும் அந்த வாடகை வீட்டில், மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கழிவறை, விளையாட்டு திடல், முதலுதவி பெட்டி, மின்விசிறி, முறையான குடிநீர் வசதி, காற்றோட்டமான சுற்றுச்சூழல், இவை அனைத்துமே முறையாக இல்லை. மேலும் காலநிலை மாற்றத்தினால் அவ்வப்போது ஏற்படும் கடும் வெயில் மற்றும் கனமழை போன்றவற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வண்ணம் வகுப்பறைகளும் இல்லை.


Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

1 மற்றும் 2 ஆம் வகுப்புகள் ஒரு கட்டிடத்திலும் 3 முதல் 5 வரை ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட கட்டிடத்திலும் நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகென தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் உள்ளனர். 3 முதல் 5 வரை பாடம் நடத்தும் இந்த அறையில் தான் ஒரு இடத்தில் மசாலை அரைப்பதற்கான அம்மிகுழவியும் குடிநீர் தொட்டியும் அமைந்து உள்ளது. குண்டும் குழியுமான தரை, கிழிந்த மறைப்பு என பார்ப்பதற்கு பரிதாபமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.


Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

எனவே, புதியகட்டிடம் கட்டும்வரை பள்ளி மாணவர்களுக்கு வேறு ஒரு பாதுகாப்பான மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் உடைய இடத்தில் தற்காலிகமாக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் பள்ளி கழிவறையில் ஏற்பட்ட விபத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . அதேபோல் மேலும் ஒரு சம்பவம் நடந்துவிடகூடாது .


Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

சேதமடைந்த பள்ளி கட்டிடதற்கு பதிலாக புதிதாக பள்ளி அறைகள் கட்டப்பட்டு உள்ளது. கட்டப்பட்டு சில மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் மக்கள் பிரதிநிதிகளின் கையால் திறக்கப்படுவதற்காக காத்திருக்கும் சூழ்நிலை உள்ளதாக கூறும் இப்பகுதி மக்கள், தற்போது காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது இந்த பள்ளியும் பயன்பாட்டிற்கு வந்தால் நல்லது என்கின்றனர் .


Govt School Building: மக்கள் பிரதிநிதிகளுக்காக காத்திருக்கும் புதிய பள்ளி கட்டிடம் - பாழடைந்த பள்ளியில் நடக்கும் வகுப்பறைகள்-மழைக்கு முன் திறக்கப்படுமா?

எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விஷயத்தை உடனடியாக நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான ஆவணங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
GT Vs KKR, IPL 2024:  பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
Lok Sabha Election 2024 LIVE: மங்களகிரி தொகுதியில் வாக்களித்தார் பிரபல நடிகர் பவன் கல்யாண்
Lok Sabha Election 2024 LIVE: மங்களகிரி தொகுதியில் வாக்களித்தார் பிரபல நடிகர் பவன் கல்யாண்
Embed widget