மேலும் அறிய

தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

காற்றாலை  மின்கம்பம் மற்றும் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக் கோரிக்கை.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடி முள்ளகாட்டில் கடற்கரை பகுதியில் தமிழக அரசு சார்பில் 1986 ஆம் ஆண்டு 21 காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் 55 கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டத்தை அரசு கண்டுகொள்ளாததை தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி, கயத்தாறு, தாராபுரம் என விரிவடைந்த திட்டம் தற்போது தமிழகத்தில் காற்றின் தாக்கம் அதிகரித்துள்ள பகுதிகளில் தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டம், புதூர் வட்டாரத்தில் மேலக்கரந்தை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கடந்த ஆட்சியில் 2019ம் வருடம்  மேலக்கரந்தையில் காற்றாலை மின்கம்பம் மற்றும் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க சுமார் ரூபாய்  முந்நூறு கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழக அரசு தனியார் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.


தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

காற்றாலையின் சிறகுகள் குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு இறக்கி வைக்கப்படுகிறது. காற்றாலை கம்பம் மற்றும் உதிரி பாகங்கள் இங்கு கடந்த ஓராண்டுக்குக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. காற்றாலையின் பாகங்கள் முழுமையாக வடிவமைக்கப்பட்ட பின்னர் இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் கப்பலில் கொண்டுசெல்லப்படுகிறது.


தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் கூறும் போது, “எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தை சேர்ந்த சுமார் பதிமூன்று கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் இப்பகுதி இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது தனது உற்பத்தியை செய்துவரும் ஆலை நிர்வாகம் வெளிமாநில இளைஞர்கள், வெளிமாவட்டத்தவர்கள் மூலம் பணியை செய்து வருகிறது. மருந்துக்கு கூட இப்பகுதி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு பறிபோய் உள்ளது. தவிர நிர்வாகம் தனது தொழில் ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது. தவிர இப்பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு ஆலை நிர்வாகத்திடம் அணுகினால் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கிறது.


தூத்துக்குடி: காற்றாலை  மின்கம்பம் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க கோரிக்கை

எட்டையபுரம் வட்டம் புதூர் வட்டாரம் முத்துலாபுரம் குறுவட்டங்களில் உள்ள மேலக்கரந்தை, மாசார்பட்டி, மாவில்பட்டி, வெம்பூர், அழகாபுரி, அயன்வடமலாபுரம், முத்துலாபுரம் கீழக்கரந்தை, தாப்பாத்தி, வெளவால் தொத்தி, சக்கிலிபட்டி, நம்பிபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய எவ்வித தொழில் வளர்ச்சி இல்லாத பகுதி என்பதால் புதிய தொழில் தொடங்குவோர்க்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அரசின் சலுகைகளை. பெற்றுக் கொண்டு இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்காமல் வஞ்சிப்பது வேதனையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு மேலக்கரந்தை சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget