மேலும் அறிய

வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்தனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மாசு பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் பரவுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

இந்தநிலையில், தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சில நாட்கள் கழித்து இறந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

இதையெடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி சீல் வைத்தது. இதற்கிடையே, வேலைவாய்ப்பு காரணத்துக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினும், ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் குறைத்தீர்க்கும் தினமான திங்கள்கிழமைதோறும் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்கள், ஆலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் மீனவ மக்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தங்கம், நிர்மல், ஜோயல், செல்வம், சற்குணராஜ், ஜோஸ் ஆனந்த், கிளிண்டன், மோகன், அக்சயா உள்ளிட்ட 16 பேர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

தொடர்ந்து அவர்களில் தங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 16 பேர் மனு அளிக்க வந்தோம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு இல்லாமல் முடங்கி உள்ளோம். மேலும், ஆலையை திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்தனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  “ஸ்டெர்லைட் ஆலையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். எந்தவித பாதிப்பும் இல்லை. கழிவு நீர் கடலில் கலப்பதாக ஆலை எதிர்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு தகுந்த ஆதராம் இல்லை.  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து படிப்பு உதவி செய்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் மழை பெய்யும் என கூறுகின்றனர். ஆனால் ஆலை மூடி 4 ஆண்டுகள் ஆகிறது. போதிய மழை இல்லை. எனவே, வதந்திகளை நம்பாமல் ஆலையை திறக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

ராஜாவின்கோவில் பகுதியை சேர்ந்த ராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்பு இல்லை, 15 பேர் இறப்புக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. இதேபோல, காற்று மாசுபாட்டுக்கும் ஆலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே, இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget