மேலும் அறிய

வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்தனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மாசு பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் பரவுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

இந்தநிலையில், தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சில நாட்கள் கழித்து இறந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

இதையெடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி சீல் வைத்தது. இதற்கிடையே, வேலைவாய்ப்பு காரணத்துக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினும், ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் குறைத்தீர்க்கும் தினமான திங்கள்கிழமைதோறும் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்கள், ஆலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் மீனவ மக்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தங்கம், நிர்மல், ஜோயல், செல்வம், சற்குணராஜ், ஜோஸ் ஆனந்த், கிளிண்டன், மோகன், அக்சயா உள்ளிட்ட 16 பேர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

தொடர்ந்து அவர்களில் தங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 16 பேர் மனு அளிக்க வந்தோம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு இல்லாமல் முடங்கி உள்ளோம். மேலும், ஆலையை திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்தனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


வேலை வாய்ப்பு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - திங்கள்தோறும் மனு அளிக்கும் ஆதரவாளர்கள்

தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  “ஸ்டெர்லைட் ஆலையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். எந்தவித பாதிப்பும் இல்லை. கழிவு நீர் கடலில் கலப்பதாக ஆலை எதிர்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு தகுந்த ஆதராம் இல்லை.  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து படிப்பு உதவி செய்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் மழை பெய்யும் என கூறுகின்றனர். ஆனால் ஆலை மூடி 4 ஆண்டுகள் ஆகிறது. போதிய மழை இல்லை. எனவே, வதந்திகளை நம்பாமல் ஆலையை திறக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

ராஜாவின்கோவில் பகுதியை சேர்ந்த ராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்பு இல்லை, 15 பேர் இறப்புக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. இதேபோல, காற்று மாசுபாட்டுக்கும் ஆலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே, இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: கொன்று குவிப்பேன் என சொல்லி போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்- ஹார்மஸை திறக்க ஒகே சொன்ன ஈரான்
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஏப்ரல் 10 சம்பவம், USA-வின் 15 VS ஈரானின் 10 - யார் கை ஓங்கும்? பாகிஸ்தானில் மொத்தமாக முடியுமா?
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
Embed widget