மேலும் அறிய

சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஓட்டப்பிடாரம் அருகே சோகம்

உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம் அருகே கிணற்று ரூமில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சுவர் இடிந்து விழுந்து கிணற்றிற்குள்  விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.


சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஓட்டப்பிடாரம் அருகே சோகம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கானம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன்காலனி ஆரைக்குளம் செல்லும் மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் வடக்கு ஆரைக்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 45), கவர்னகிரியை சேர்ந்த மாரிமுத்து (50), சிந்தலக்கட்டை கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் (75) உள்பட பலர் வேலை செய்து வந்தனர்.

விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் மின்மோட்டார் பழுதாகி விட்டது. அதை பழுது பார்ப்பதற்காக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் அரியநாயகம் (60) வரவழைக்கப்பட்டார். அவர் கிணற்றை ஒட்டிய மோட்டார் அறையின் கீழ்தளத்தில் உள்ள மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு துணையாக தொழிலாளர்கள் ஈஸ்வரன், மரியதாஸ், மாரிமுத்து ஆகியோரும் அங்கு சென்றனர். அப்போது திடீரென்று மோட்டார் அறையின் கீழ்தளம் இடிந்து கிணற்றில் விழுந்தது. இதனால் அங்கிருந்த 4 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். அவர்கள் மீது கட்டிட இடிபாடுகளும் விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.


சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஓட்டப்பிடாரம் அருகே சோகம்

இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையா தலைைமயில் வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கினர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மாரிமுத்து, அரியநாயகம் ஆகியோரை மீட்டு மேல ெகாண்டு வந்தனர்.அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஓட்டப்பிடாரம் அருகே சோகம்

தொடர்ந்து மற்ற 2 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். இதில் மரியதாஸ் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் மற்றொரு தொழிலாளியான ஈஸ்வரனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.


சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - ஓட்டப்பிடாரம் அருகே சோகம்

அவர்கள் கிணற்றில் இறங்கி ஈஸ்வரனை தேடினார்கள். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு மணியாச்சி துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் ஆய்வாளர் முத்துராமன் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget