மேலும் அறிய

அன்று தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க - இன்று தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக

திட்டத்தின் நோக்கம் ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பது தான். அது வரவேற்கக்கூடியது தான், ஆனால் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுகிறதா என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தூத்துக்குடி மாநகராட்சியில் துவக்கப்பட்ட அட்சயப்பாத்திரம் திட்டம் மடைமாற்றம் செய்யப்பட்டு தேவையில்லாதோர் வைத்திடுக..தேவைப்படுவோர் எடுத்திடுக எனப் மாற்றப்பட்டுள்ளது.


அன்று தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க - இன்று தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த அல்பி ஜான் வர்கீஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அன்போடு தூத்துக்குடி என்ற திட்சத்தின் ஒருபகுதியாக அட்சய பாத்திரம் என்ற திட்டத்தினை மாநகராட்சி வளாகத்தில் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசும்போது, ‘’தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற, உழைக்க இயலாத ஏழ்மை நிலையிலுள்ள மக்களின் பசியைப் போக்கிடும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் வைப்பதற்காக மாநகராட்சி வளாகத்தில் ஒரு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் வீட்டிலுள்ள பழ வகைகள், உலர்ந்த ரொட்டிகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு, கேக் வகைகள், பேக்கரி உணவுப் பொருள்கள், பிஸ்கட், சீலிடப்பட்ட ஜூஸ் பாட்டில்கள், சீலிடப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், வீட்டில் சமைக்கப்பட்ட பொட்டலமாக கட்டப்பட்ட உணவுகள் என இவற்றை குளிர்சாதனப் பெட்டிகள் வைத்துச்செல்லலாம்.


அன்று தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க - இன்று தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக

உண்பதற்கு முன் உதவி செய்’ என்பதுதான் இதன் நோக்கம். இதன் மூலம் உணவுப் பொருள்கள் பசியால் வாடும் ஒரு ஜீவனுக்குப் போய்ச் சேரும். தொண்டு செய்யும் உள்ளமுடையவர்களையும் பசியால் வாடுபவர்கள், உதவி தேவைப்படுபவர்களை ஒரே இடத்தில் இணைக்கும் விதமாகத்தான் இந்த அட்சய பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் மட்டுமல்லாமல் இதன் அருகில் இருக்கும் நன்கொடைப் பெட்டகத்தில் ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், பாத்திரங்கள், பேனா, நோட்டுகள் மற்றும் இதரப் பயனுள்ள பொருள்களையும் வைக்கலாம். ’தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க’ என்பதுதான் இந்த நன்கொடைப் பெட்டகத்தின் நோக்கம். எனவே, மாநகராட்சி மக்கள் பெருமளவு உதவிட வேண்டும்’’ என தெரிவித்து இருந்தார். முதலில் பலத்த வரவேற்பை பெற்ற இத்திட்டம் நாளடைவில் இத்திட்டம் காணாமல் போனது தான் பரிதாபம்.


அன்று தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க - இன்று தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக

ஆனால் மீண்டும் தூத்துக்குடி மாநகராட்சியில் தேவைப்படாதோர் வைத்திடுக, தேவைப்படுவோர் எடுத்திடுக திட்டத்தை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே சோதனை முயற்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் தாங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத பொருட்களை தேவைப்படுவோர்க்கு வழங்கும் முயற்சி வரவேற்பு பெற்றது. மாநகர் மக்கள் பலர் பயன் பெற்றதால் தற்பொழுது நிரந்தரமாக இதற்கென்று "தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக" என்ற முன்னெடுப்பை தொடங்கப்பட்டுள்ளது.


அன்று தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க - இன்று தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக

இதனை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொருட்கள் வழங்கினார். மாநகர மக்களும் தாங்கள் பயன்படுத்திய மற்றவர்களுக்கு தேவைப்படும் உபயோகமான மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள், பேக்குகள், சீருடைகள், போர்வைகள், காலணிகள், பாத்திரங்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை இந்த மையத்தில் வைத்திடுமாறும் தேவைப்படுவோர் இம்மையத்திற்கு வந்து பெற்று கொள்ளுமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


அன்று தேவையில்லாததை விட்டுச் செல்க, தேவையானவற்றை பெற்றுச் செல்க - இன்று தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திக
 
இது குறித்து விவசாயி சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.முத்துவிடம் கேட்டபோது, திட்டம் துவங்குவது வரவேற்கதகுந்தது. ஆனால் தொடர்ச்சியாக திட்டம் செயல்படுகிறதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்ற அவர், கடந்த காலத்தில் துவக்கப்பட்ட அட்சய பாத்திரம் திட்டம் நாளடைவில் இல்லாமலேயே போனதையும் , அட்சய பாத்திர திட்டத்தினால் பயனடைந்தோர் பசிக்கு ஏதாவது இருக்கா என தேடி வந்ததும் உண்டு என்கிறார்
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget