மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஷவர்மா கடையிலும் உறையவைக்கப்பட்ட சிக்கன் பயன்படுத்துவது கண்டறியப்படவில்லை

உணவகத்தில் உணவு சாப்பிட்டததால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், மருத்துவர் மூலமாகவோ அல்லது தாங்களாகவோ உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொய்யான தகவல் மூலம் பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 ஷவர்மா உணவகங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 11 கிலோ ஷவர்மா ரொட்டி, 10 கிலோ ஷவர்மா மசாலா மற்றும் 3 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஷவர்மா கடையிலும் உறையவைக்கப்பட்ட சிக்கன் பயன்படுத்துவது கண்டறியப்படவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஷவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷவர்மா உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார், சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாசு ஆகியோர் கடந்த இரண்டு தினங்களாக ஆய்வு செய்தனர்.

மொத்தம் 16 ஷவர்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, காலாவதி தேதி இல்லாத 11 கிலோ ஷவர்மா ரொட்டிகளும், சந்தேகத்துக்கு இடமான 3 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், 10 கிலோ தப்புக்குறியீடான மசாலா மற்றும் சுகாதாரமற்ற வகையில் இருந்த மசாலாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து காலாவதி தேதி இல்லாத ஷவர்மா ரொட்டி தயாரித்த நிறுவனமும் ஆய்வு செய்யப்பட்டு, லேபிள் இல்லாத 4 கிலோ ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்புத் துறைக்குத் தவறான தகவல் வழங்கி, உரிமத்துக்கு பதிலாக, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்ற 2 ஷவர்மா கடைகளுக்கு நிறுத்த அறிவிப்பு சார்பு செய்யப்பட்டு, கடைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு புரோட்டா கடையை ஆய்வு செய்ததில், அதன் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டு, அதன் இயக்கத்தை நிறுத்தி வைத்தும் நியமன அலுவலரால் உத்திரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரை எந்த ஷவர்மா கடையிலும் உறையவைக்கப்பட்ட சிக்கன் பயன்படுத்துவது கண்டறியப்படவில்லை.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ச.மாரியப்பன் கூறியதாவது: ஷவர்மா உணவு வணிகர்கள் ஷவர்மா அடுப்பை தூசிகள் மற்றும் பூச்சிகள் விழாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்திடல் வேண்டும். சிக்கன் வெந்திருந்தாலும், அதனை தவாவில் சிறிது நேரம் வேக வைத்து, ஷவர்மா ரொட்டியில் பயன்படுத்த வேண்டும். மீதமான சிக்கனை அன்றே உரிய முறையில் அழித்திடல் வேண்டும். உரிய லேபிள் விபரங்களுடன் உள்ள ஷவர்மா ரொட்டிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்திடல் வேண்டும். உணவகப் பணியாளர்களுக்கு 'தொற்றுநோய் தாக்கமற்றவர்' என்று மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு டைபாய்டு உள்ளிட்ட உணவின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முட்டையில் இயல்பாகவே பாக்டீரியாக்கள் இருப்பதினால், கிருமிநீக்கம் செய்யப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட 'மையோனைஸ்' மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். கிருமிநீக்கம் செய்யப்படாத முட்டையில் தயாரித்த 'மையோனைஸ்' பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பிரீசர் பயன்படுத்தும் வணிகர்கள் உரிய வெப்பநிலையை பராமரிப்பதற்கான பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும்.பிரீசர் தூய்மையாக இல்லையெனில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Embed widget