மேலும் அறிய

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க அரசு ஆவண செய்ய வேண்டும் - ஐஎன்டியுசி தொழிலாளர்

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை தடுக்க வேண்டுமானால் இளைஞர்களை கவனத்தை நிலைப்படுத்த பல பெரிய தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மாபெரும் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் பிஜி பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஐ.என்.டி.யு.சி மாநில செயல் தலைவர் பி. கதிர்வேல் விளக்க உரையாற்றினார் .


ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க அரசு ஆவண செய்ய வேண்டும் - ஐஎன்டியுசி தொழிலாளர்
நாட்டின் 35 கோடி பேர் வேலை பார்த்து, வேலை செய்யும் திறனை இழந்து உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பவர்கள் வீட்டு வேலை மட்டும் செய்யும் பெண்கள் என 105 கோடி பேரை காப்பாற்ற வேண்டி உள்ளது. நாட்டில் வேலை செய்யும் 35 கோடி பேரில் அரசு துறை பொதுத்துறை மற்றும் கார்பரேட் நிறுவனங்களில் 2 கோடி பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அவர்களை சார்ந்து வாழ்பவர்கள் 6 கோடி பேர். எனவே 8 கோடி பேர் வாழ்க்கை பாதுகாப்பு வளையத்திற்கு வந்து விடுகிறது. அப்படி என்றால் மீதமுள்ள 33 கோடி பேர் தொழிலாளர்களாகவும் விவசாயிகளாகவும் தினக்கூலியாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு எந்தவித வேலைக்கான சட்ட பாதுகாப்பு சமூக பாதுகாப்போ இல்லை. மத்திய மாநில அரசுகள் இவர்களைத்தான் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அதற்காக நல வாரியம் அமைத்து நடைமுறைப்படுத்துகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பயன் கிடைக்கவில்லை அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் பெறுகின்ற அத்தனை உரிமைகளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே அதற்கான முறையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கிட மத்திய மாநில அரசுகளை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.


ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க அரசு ஆவண செய்ய வேண்டும் - ஐஎன்டியுசி தொழிலாளர்

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உற்பத்தியை பெருக்கி வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதனை ஒரு சமூக பிரச்சனையாக கருதி அரசு சிந்திக்க வேண்டும். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை அரசு மூடியதால் மாவட்டம் முழுவதும் உள்ள 2000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் லாரி டிரைவர், கிளீனர், கடைநிலை ஊழியர்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள்,குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள. அரசு இவற்றை கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்பட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உயர்ந்திட தமிழக அரசு விரைந்து உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை காலம் தாழ்த்தாது திறக்க அரசு ஆவணம் செய்ய இந்த கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.


ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க அரசு ஆவண செய்ய வேண்டும் - ஐஎன்டியுசி தொழிலாளர்

தென் மாவட்டங்களில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் இளைஞரிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருவதாலும் சாதிய வன்முறைகளுக்கு இந்த இளைஞர்கள் எளிதில் ஆட்பட்டு விடுவதாலும் சாதிய மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையின்படி தென் மாவட்டங்களில் சாதிய மாதல்களை தடுக்க வேண்டுமானால் இளைஞர்களை கவனத்தை நிலைப்படுத்த பல பெரிய தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்களும் சில ஜாதி அமைப்புகளும் இதனை வலியுறுத்தி வருகின்ற வேலையில் சமூக விரோதிகளுக்கு பயந்து புதிய தொழிற்சாலைகளை திறக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை நீதிமன்றத்தை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது ஆளுகின்ற அரசின் கையாலாக தனமாக உள்ளது. புதிய தொழிற்சாலையில் தொழில் தொடங்கவும், மூடிய தொழிற்சாலைகளை உடனே திறந்திடவும் மத்திய மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட இந்த கருத்தரங்கம் பொறுப்புடன் வலியுறுத்துகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க அரசு ஆவண செய்ய வேண்டும் - ஐஎன்டியுசி தொழிலாளர்

இந்திய நாடு வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தேசத்தின் மீது விரோதம் கொண்ட அந்நிய சக்திகள் பெரும் பலம் கொண்ட தேச விரோத சக்திகள் தொழிற்சாலைகளை இயங்க விடாமல் இந்திய பொருளாதாரத்தை வளர விடாமல் தடுத்து வருகிறது. குளச்சல் துறைமுகம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலை, தாதுமணல், மதுரை, இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கிரானைட் தொழில்கள் தொழிலாளர்கள் நலனுக்காக தொழிற்சாலைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக திறந்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட இந்த கருத்தரங்கம் கேட்டுக்கொள்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தை சார்ந்து பல தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளது. நிறுவனம் சில சதிகாரர்களால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள தாமிர தொழிற்சாலை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Embed widget