மேலும் அறிய

நெல்லையில் குவாரி விபத்து : தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளரை, மங்களூருவில் கைது செய்தது தனிப்படை காவல்துறை

மேலும் ஒருவரின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டார்

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் தனியார் குவாரிகள் கடந்த 14- ந்தேதி பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது, இதில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இருவர் உயிரிழந்தனர், இந்நிலையில் மேலும் இருவர் பாறைகளின் இடுக்குகளில் சிக்கி உள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 

இன்னொருவர் இருக்குமிடம்  கண்டறியப்பட்டு அவரை மீட்கும் பணி நடந்தது. ஆனால் ராட்சச பாறையின் அடியில் அவர் சிக்கியுள்ளதால் பாறையை வெடிவைத்து தகர்த்து அவரை மீட்கும் பணி இன்று காலை துவங்கியது. விபத்து நடந்த குவாரியில் 22 முதல் 25 அடி உயரம் கொண்ட ராட்சத பாறைகள் சரிந்த நிலையில் உள்ளது. இதனடியில் தான்  ஆறாவது நபரின் உடல்  இருப்பதாக கூறப்படுகிறது,  32 ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு இந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஜெலட்டின் குச்சிகளும் 50 முதல் 125 கிராம் எடையுள்ள வெடிமருந்துகள் மொத்தம் மூன்றரை கிலோ வெடிமருந்து பொருத்தப்பட்டுள்ளது. இதில்  ஆறு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் முதல் நிலை அலுவலர் என்று சான்று பெற்ற நபர்கள் 4  பேரும் பாறைகளின் கடினத் தன்மையை அறிந்து எப்படி வெடிகளை வெடிக்கச் செய்யலாம் என்று கணக்கிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட பின்னர் சிதறிய பாறைகள் அனைத்தும் அகற்றும் பணி மாலை 4 மணிக்குப் பின்னர் தொடங்கியது. அதன் பின்னரே இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் இந்த விபத்திற்கு காரணமான குவாரி உரிமையாளர்களான சங்கர நாராயணன், மற்றும் செல்வராஜ் அவரது மகன் குமார், மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சங்கர நாராயணனை காவல்துறையினர் கைது செய்தனர், மேலும் செல்வராஜ் அவரது மகன் குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர், இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கபட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர், இந்த நிலையில் கர்நாடக  மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியிருப்பது காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதூரவேதி நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் போலீசார் தீவிர விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விசாரணையின் ஒருபகுதியாக குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரின்  திசையன்விளையில் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதூர்வேதி  தலைமையிலான போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி  விபத்து நடந்த குவாரியில் உள்ள அலுவலகத்தின் பூட்டினை  வருவாய்துறை முன்னிலையில் உடைத்து  பல மணிநேரம் சோதனையிட்டனர். இந்த சோதனையில்  பல்வேறு ஆவணங்கள், முக்கிய கோப்புகள், எவ்வளவு கற்கள் வெளியில்  கொண்டு செல்லப்பட்டது, உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ரசீதுகள் ஆகியவற்றை   கைப்பற்றி சென்றனர். சோதனையின் முடிவில் நீதிமன்ற ஆணையை அலுவலக கதவில் ஒட்டினர். பின்னர் அலுவலகத்தை பூட்டி சீல்வைத்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Embed widget