![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நெல்லையிலும் எல்லா வகையான பால் உப பொருட்களை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது - பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்
ஆவின் பால்வளத் துறையில் உடனடியாக மேஜிக் செய்து மாற்ற முடியாது. 35,000 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் இது.
![நெல்லையிலும் எல்லா வகையான பால் உப பொருட்களை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது - பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் There are opportunities to bring in all types of dairy products in Nellai Corporation Minister mano thangaraj TNN நெல்லையிலும் எல்லா வகையான பால் உப பொருட்களை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது - பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/f7e7dfe1c4afa74b239337f7f611c8fe1684866345410109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆவின் பாலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பால் கொள்முதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படும் பகுதி, பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படும் பகுதி மற்றும் அவைகளை குளிர்வித்து சேமிக்கும் கிட்டங்கி என அனைத்தையும் நேரடியாக சென்று பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து முதல் தளத்தில் நெய் மற்றும் பால்கோவா போன்ற ஆவின் பால் உப பொருட்கள் தயார் செய்யும் பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்தார். இங்கு நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு குறித்த விபரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும்போது, "பொதுமக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, திருநெல்வேலி ஆவின் பால் கையாளும் திறனை உயர்த்த முடிவு செய்து உள்ளோம். 45 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலை 70 ஆயிரம் லிட்டராக உயர்த்த முயற்சி செய்து வருகிறோம். அதேபோல் பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் திட்டம் உள்ளது. இதற்காக இரண்டு லட்சம் கறவை மாடுகள் ஏற்பாடுகள் செய்தும் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் செய்ய உள்ளோம். மற்ற நிறுவனங்களுக்கு போட்டி பொருளாக ஆவின் பொருட்கள் தயார் செய்ய முயற்சி செய்கிறோம். நெல்லையில் ஆவின் பாலகத்தை வளர்ச்சி அடைய செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. பால் கொள்முதலை அதிகரித்து பால் கையாளும் திறனை மேம்படுத்த உள்ளோம். இதன் மூலம் எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளதோ அங்கு புதிய இயந்திரங்கள் அமைத்து பால் உப பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் திருநெல்வேலிக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆவின் உப பொருட்களைப் பொறுத்தவரை நல்ல தரமான பொருளாக இருக்கும், விலை குறைவாக இருக்கும். இந்தத் துறையில் எங்களுக்கு சவால் என்னவென்றால் விவசாயிடம் பாலை வங்கி மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஆவினில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. அதை மெல்ல மெல்ல சரி செய்து வருகிறோம். குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இருந்த பிரச்சனையை வங்கி மூலமாக நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆவின் பால்வளத் துறையில் உடனடியாக மேஜிக் செய்து மாற்ற முடியாது. 35,000 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் இது. எனவே எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் செய்யாமல் முழுமையாக இந்த துறையை ஆய்வு செய்து அனைவரிடமும் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆவின் வளர்ச்சிக்கு 4 வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு மாதத்தில் அதற்கான விடை தெரியும். நெல்லை மாநகராட்சியிலும் எல்லா வகையான பால் உப பொருட்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே சென்னையை போலவே நெல்லையிலும் புதிய இயந்திரங்கள் அமைத்து புது புது பால் உப பொருட்கள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்" என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)