மேலும் அறிய

நெல்லையில் தனது 73-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் முதியவர் தங்கப்பன்

”கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு உதாரணமாக தனது 73 வது வயதில் முனைவர் பட்டம் பெற்று உள்ளார் முதியவர் தங்கப்பன்”

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் தங்கப்பன் (73),  இவர் அப்பகுதியில்  தேவசம் போர்டு பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்று உள்ளார், பின்னர் முந்திரி பயிரிட்டு தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார், இவர் ஏற்கனவே தனது இளமை பருவத்தில் எம்ஏ வரலாறு மற்றும் எம்எட், எம்பில், பிஏஎல் ஆகிய படிப்புகளை முடித்துள்ள நிலையில் உயர் கல்வியின் மீதும் காந்திய கொள்கைகள் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படிப்பை தொடங்கியுள்ளார்.

இதனையடுத்து முனைவர் பட்டத்திற்கான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார் குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் கனகாம்பாளை வழிநடத்துனராக  கொண்டு தனது ஆய்வை துவக்கியுள்ளார் 


நெல்லையில் தனது 73-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் முதியவர் தங்கப்பன்

தொடர்ந்து, இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது, காந்திய கொள்கைகள் மூலம் பயங்கரவாதத்தை எவ்வாறு வேரறுப்பது என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக முதியவர் தங்கப்பன் பல்வேறு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இறுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு தனது பி.ஹெச்டி படிப்பை முடித்துள்ளார், இருப்பினும் கொரோனா காரணமாக தங்கப்பனுக்கு பிஎச்.டி பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது, இந்த சூழ்நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையால் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றுக் கொண்டார், தற்போது தங்கப்பனுக்கு 73 வயது ஆகிறது, இதுபோன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பட்டம் வாங்குவது வழக்கமான விஷயம் தான் என்றாலும் கூட நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் பயங்கரவாதம் குறித்தும், அதில் காந்தி தத்துவத்தின் பயன்பாடு குறித்த தலைப்பில் முதியவர் தங்கப்பன் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே. 


நெல்லையில் தனது 73-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார் முதியவர் தங்கப்பன்
இது குறித்து தங்கப்பன் கூறுகையில், ”தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும், தனது இறுதி நாள் வாழ்வின் முழுமையும் கல்வி கற்க வேண்டும் எனவும் காந்திய கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கிறார், மேலும் நான் வெறும் பட்டத்துக்காக படிக்கவில்லை என்றும் காந்தியின் கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது என்றும் தெரிவித்தார், மேலும் வரும் இளைய தலைமுறையினரும் காந்திய கொள்கையை பின்பற்றி அகிம்சை, அன்பு வழியில் பயங்கரவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறினார். கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு இவரை போன்றோர் மிகப்பெரிய முன்னுதாரணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget