மேலும் அறிய

தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர்.. 2வது நாளாக தேடும் பணி தீவிரம்..! நெல்லையில் சோகம்..!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் குளித்து மகிழ மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளனமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தாமிரபரணி ஆறு:

குறிப்பாக வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படும். காவல்துறையினரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது சின்ன சங்கரன்கோவில்.

இங்குள்ள  தாமிரபரணி ஆற்றில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குளித்துவிட்டு செல்வர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும்.. இந்த சூழலில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க வந்திருந்தனர், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விஸ்வபுரம் பகுதியை சேர்ந்த பால முருகன் என்பவரது மகன் சுரேஷ் (23) தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 20 பேருடன் ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளார்.

இளைஞர் மாயம்:

அப்போது அனைவரும் குளித்துக்கொண்டிருந்த போது சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது திடீரென ஆற்றில் மூழ்கிய நிலையில் மாயமாகியுள்ளார். உடன் வந்தவர்கள் குளித்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் மாயமான சுரேஷை தேடி உள்ளனர். எங்கும் அவர் கிடைக்காத நிலையில் காவல்துறையினர் மற்றும் அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குறிப்பாக அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய சுரேசை தீவிரமாக தேடி வந்தனர். இரவு நேரமானதால் நீண்ட  நேர தேடுதலுக்கு பின்னும் சுரேஷ் கிடைக்காத  நிலையில் வீடு திரும்பினர். தொடர்ந்து இன்று அதிகாலை முதல் இரண்டாவது நாளாக மீண்டும் சுரேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் மூழ்கியவரை இன்னும் மீட்காத நிலையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர் உயிரிழப்புகள்:

இதனால் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த 2 மாதத்தில் அம்பை, பாபநாசம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் சுமார் 6 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்பவர்களுக்கு ஆழமான பகுதி குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், அதிகாரிகள் அது குறித்த அறிவிப்பு பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

எனவே தொடர் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.  தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் ஆற்றில் குளிக்க வந்த வாலிபர் மாயமான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Embed widget