மேலும் அறிய

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகச்சேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.பாண்டியர் காலத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியுள்ளதை அறியமுடிகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு

இந்நிலையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதைக் கள ஆய்வின் போது கண்டறிந்து படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். இதுபற்றி வே,ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது,பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் “ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோறனான விசைய கங்கர் செய்தது உ” என எழுதப்பட்டுள்ளது. இக்கோயில் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டிருக்கலாம்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு

இவ்வூருக்கு மிக அருகில் உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது. மேலும் விருதுநகரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகச்சேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியுள்ளதை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டயரில் சிக்கிய தொண்டன் தலை! Cool-லாக காரில் வந்த ரெட்டி! நெஞ்சை பதற வைக்கும் காட்சி
Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
4 States By Election Results: தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
தட்டித் தூக்கிய AAP; ஷாக்கான BJP - 4 மாநில இடைத்தேர்தலின் முழு முடிவுகளின் விவரங்கள் இதோ
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
திமுக கல்வியாளர் அணி செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நியமனம்- தலைவர் யார்?
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Actor Srikanth: பெட்டிக்கடை, சர்வர்.. இவ்ளோ கஷ்டப்பட்ட ஆளா நடிகர் ஸ்ரீகாந்த்? நாசம் செய்த போதை
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Srikanth Arrest: போதையால் சீரழிந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது! உள்ளே தள்ளிய போலீஸ் - நடந்தது என்ன?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Coolie Update: ரெடியா இருங்க! ஜெயிலர் ஸ்டைலில் கூலி அப்டேட் - முதல் பாட்டு எப்போ ரிலீஸ்?
Udanpirappe Va : ‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
‘உடன்பிறப்பே வா’ முதல்வரிடம் குறைகளை கொட்டித் தீர்க்கும் திமுகவினர்..!
D Sneha IAS: செங்கல்பட்டு புதிய ஆட்சியர்.. யார் இந்த சினேகா ஐ.ஏ.எஸ் ? சாதித்தது என்ன ?
D Sneha IAS: செங்கல்பட்டு புதிய ஆட்சியர்.. யார் இந்த சினேகா ஐ.ஏ.எஸ் ? சாதித்தது என்ன ?
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
ஜூலை இறுதிக்குள் 2346 ஆசிரியர் நியமனம்; கருணை அடிப்படையில் பணி- இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர் அன்பில்!
Embed widget