ஏலே ரெடியா? நெல்லை - சென்னை: செப்., 24 முதல் தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் துவக்கம்...!
தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகவும், தென்தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை- சென்னை இடையே இயக்கப்பட உள்ளது .

வந்தே பாரத் எனப்படும் அதிவிரைவு ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் அதிவேகத்தில் இயங்கும். இதனால் இதற்கு நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னை- மைசூர் ஆகிய இடங்களுக்கும் தமிழகத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகவும், தென்தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை- சென்னை இடையே இயக்கப்பட உள்ளது . இந்த ரயிலை வரும் 24ஆம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலை வணிக மேலாளர் ரவி பிரியா, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடக்க விழாவிற்கான மேடை அமைக்கும் இடம், ரயில் வந்து செல்லும் நடைமேடை, ரயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக்கூடிய பிட் லைன், ரயில்வே முன்பதிவு கவுண்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த், ”நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 24ம் தேதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு தென்னக ரயில்வேக்கு கிடைக்கப்பெற்றது. அதனை தொடர்ந்து தொடக்க விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் ஒன்பது ரயில்களை பிரதமர் காணொளி காட்சி வாயிலாக வரும் 24ஆம் தேதி இயக்கி வைக்கிறார். அதில் நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலும் ஒன்று. இந்த ரயில் முதற்கட்டமாக விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நெல்லையில் நடைபெறும் தொடக்க விழா காணொளி காட்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை புணரமைக்கும் பணிக்கான திட்ட வரையறை தயார் செய்யப்பட்டு வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















