மேலும் அறிய

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்

’’பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின்வாரியம் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இங்கு வாழும் நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக கவலை’’

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது சரஸ்வதி நகர் கிராமம். இங்கே சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் வசித்து வருபவர்கள் தான் கமலி ஸ்ரீ மற்றும் சுந்தரபாண்டியன். சுந்தரபாண்டியன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயதில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது கீழே கிடந்த கம்பியை எடுத்து மேலே தூக்கி விளையாடும்போது ஊரின் நடுவே தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது இரண்டு கைகளையும் காப்பாற்ற முடியாமல் போனது அன்றிலிருந்து இரண்டு கைகளும் இல்லாமல் பள்ளிக்கு சென்று கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சாதனை செய்வதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்று கூறும் வகையில் நீச்சல் போட்டியில் பல வெற்றிகளைக் கண்டு அசத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசின் உதவியோடு வேலை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் சுந்தரபாண்டியன். இந்த நிலைமை அடங்குவதற்குள் இதே ஊரில் வசித்து வரும் கமலிஸ்ரீ கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணியை காய வைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த கமலிஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த சிகிச்சை பலனில்லாமல் அவரது வலது கையை இழக்க நேரிட்டது.


மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்
இதனால் பெரும் துயரம் அடைந்த கமலிஸ்ரீ தற்பொழுது கடும் மன வேதனையில் உள்ளார். எந்த வேலையானாலும் சுறுசுறுப்பாக செய்யும் கமலிஸ்ரீ தற்பொழுது எந்த வேலையும் செய்ய முடியாமல் அடுத்தவரின் உதவியோடு வாழ்ந்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் தங்களது ஊரின் நடுவே வீட்டின் மேற்கூரையை ஒட்டி தாழ்வாக செல்லும் அந்த உயர் அழுத்த மின் கம்பிகள் தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அந்த கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின்வாரியம் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இங்கு வாழும் நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர். இந்த ஊரிலுள்ள சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மழை மற்றும் இடி மின்னல் அடித்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலையும் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.  இதுபோல பத்துக்கும் மேற்பட்டோர் இந்த தாழ்வான மின் கம்பிகளால் பாதிக்கப்பட்டு சிறு சிறு காயங்களுடன் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.


மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்

இவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நிதி உதவியும் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையான விஷயம். தற்போது தனது கைகளை இழந்து தவிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் கமலிஸ்ரீ போல் இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்றும் அதற்கு காரணமான உள்ள இந்த தாழ்வான மின் கம்பிகளை ஊரின் ஒதுக்குப்புறமாக கொண்டுசெல்ல மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Embed widget