மேலும் அறிய

Ramanathapuram: கடற்கரை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட பெரியபட்டிணம் கல்லு பள்ளிவாசல்

நகரா என்ற ஒரு பெரிய இசைக்கருவியும் உள்ளது. இது தொழுகைக்கு மக்களை அழைக்க முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது.

முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கோவில் சுற்றளி எனப்படுவது போல முழுவதும் கற்களால் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல் கல்லுப்பள்ளி எனப்படுகிறது. பாண்டியர் முதல் சேதுபதிகள் வரையிலான காலத்தில் கட்டப்பட்ட பழமையான கல்லுப்பள்ளிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ளன. அவ்வாறான ஒரு கல்லுப்பள்ளி தான் பெரியபட்டினத்தில் உள்ள ஜலால் ஜமால் பள்ளி. தொழுகை மாடம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது. மகாமண்டபத்தைச் சுற்றிலும் தாழ்வாரம் அமைந்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள தாழ்வாரம் முன்மண்டபமாக உள்ளது.


Ramanathapuram: கடற்கரை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட பெரியபட்டிணம் கல்லு பள்ளிவாசல்

இதை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறும்போது, மகாமண்டபத்தின் உள்ளே மேற்குப் பகுதியின் நடுவில் ஒரு குவிந்த அமைப்பில் தொழுகை மாடம் உள்ளது. மகாமண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் தலா ஒரு வாசலும், கிழக்கில் 3 வாசல்களுமாக மொத்தம் 5 வாசல்கள் உள்ளன. இஸ்லாமியரின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தர்மம்), ஹஜ் என்பதன் அடையாளமாக ஐந்து வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கிழக்கில் உள்ள மூன்று வாசல்களில் நடுவில் உள்ள வாசலில் இருந்து தொழுகை மாடம் வரை அதன் இருபுறமும் கூட்டுத் தூண்கள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பாண்டியர் கால வெட்டுப்போதிகையும், நாயக்கர் கால தாமரைப்பூ, பூப்போதிகைகளும் உள்ளன.


Ramanathapuram: கடற்கரை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட பெரியபட்டிணம் கல்லு பள்ளிவாசல்

முன்மண்டபத்தின் தெற்கு, வடக்குப் பகுதியில் இரு வாசல்கள் அமைந்துள்ளன. இதில் ஒரு வரிசைக்கு 4 என இரண்டு வரிசையில் மொத்தம் 8 சதுரத் தூண்கள் வெட்டுப்போதிகைகளுடன் உள்ளன. இங்கு உள்ள தூண்கள் மற்றும் போதிகைகளின் அமைப்பைக் கொண்டு இப்பள்ளி பிற்காலப் பாண்டியர் காலத்தில் கி.பி.12-13-ம் நூற்றாண்டுகளில் தமிழர் கட்டடக்கலை அமைப்பில், கடற்கரைப் பாறைகளால் கட்டப்பட்டு விஜயநகர, நாயக்கர், சேதுபதி மன்னர்கள் காலத்தில் பழுது பார்க்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது.


Ramanathapuram: கடற்கரை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட பெரியபட்டிணம் கல்லு பள்ளிவாசல்

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்தில் இருந்த சோனகச் சாமந்தப்பள்ளியான பிழார்ப்பள்ளி என்ற இஸ்லாமியப் பள்ளி குறிப்பிடப்படுகிறது. மேலும் சமீபத்தில் வாலாந்தரவையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் பெரியபட்டினத்தில் இருந்த சூதபள்ளியான ஐந்நூற்றுவன் பெரும்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லை சொல்லும்போது, அவ்வூரில் இருந்த பிழார் பள்ளி, தரிசாப்பள்ளி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.


Ramanathapuram: கடற்கரை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட பெரியபட்டிணம் கல்லு பள்ளிவாசல்

பெரியபட்டினம் ஜலால் ஜமால் பள்ளியில் உள்ள பிற்காலப் பாண்டியர்களின் வெட்டுப் போதிகைகள், சதுரத் தூண்கள், திருப்புல்லாணி, வாலாந்தரவை கல்வெட்டுகள் ஆகியவை மூலம் இப்பள்ளிதான் பிழார்பள்ளி என்பதை அறிய முடிகிறது. இங்கு நகரா என்ற ஒரு பெரிய இசைக்கருவியும் உள்ளது. இது தொழுகைக்கு மக்களை அழைக்க முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது என்றார்.


Ramanathapuram: கடற்கரை பாறைகளை கொண்டு கட்டப்பட்ட பெரியபட்டிணம் கல்லு பள்ளிவாசல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget