மேலும் அறிய

முதலீட்டு செயலியில் பணத்தை போட்ட இளைஞருக்கு கல்தா கொடுக்க முயற்சி - 2 லட்சத்தை மீட்டு தந்த சைபர் க்ரைம் போலீசார்

இணையதளத்தில் முதலீடு செய்தால் வட்டியுடன் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால் அதற்கான வட்டி அளிக்கப்படவில்லை

ராமநாதபுரத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நூதனமுறையில் 2 லட்சம் மோசடி செய்த பணத்தை வங்கி கணக்கை முடக்கி போலீசார்  மீட்ட சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி சுபாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காமேஷ் முருகன் (24). பொறியியல் பட்டதாரியான இவர் யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கூகுள் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து அதனை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்துள்ளார். இதற்கு உடனடியாக பணம் வந்ததால் தொடர்ந்து முதலீடு செய்து வந்த காமேஷ்முருகன் ஒரு கட்டத்தில் 2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். 


முதலீட்டு செயலியில் பணத்தை போட்ட இளைஞருக்கு கல்தா கொடுக்க முயற்சி - 2 லட்சத்தை மீட்டு தந்த சைபர் க்ரைம் போலீசார்

இதற்கான 5 சதவீதம் வரை வட்டித்தொகை அந்த செயலியில் வந்த நிலையில் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தவித்துள்ளார். 2 மாத காலம் போராடி பார்த்தும் லாபத்தை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காமேஷ்முருகன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.  இதுகுறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி காமேஷ்முருகன் செலுத்திய வங்கி கணக்கினை முடக்கி வைத்தனர். இதனால் அந்த வங்கி கணக்கிற்குரிய பண பரிமாற்ற நிறுவனத்தினர், போலீசாரை தொடர்பு கொண்டு வங்கி கணக்கு முடக்கி வைத்துள்ளதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் இந்த மோசடி குறித்து தெரிவித்தபோது அந்த பணபரிமாற்ற நிறுவனத்தினர் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு செலுத்துவதற்காக வந்துள்ள தொகை என தெரிவித்தனர்.

மோசடி செய்த பணம் என்று தெரிவித்ததும் பணபரிமாற்ற நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட தனியார் மோசடி நிறுவனத்திற்கு பணத்தினை அனுப்பாமல் காமேஷ்முருகனின் வங்கி கணக்கிற்கு பணத்தினை மாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பணம் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை ராமநாதபுரம் சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், காமேஷ்முருகனிடம் வழங்கினார். இணையதள விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்த இளைஞருக்கு அப்பணத்தை காவல்துறையினா் மீட்டுக் கொடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.


முதலீட்டு செயலியில் பணத்தை போட்ட இளைஞருக்கு கல்தா கொடுக்க முயற்சி - 2 லட்சத்தை மீட்டு தந்த சைபர் க்ரைம் போலீசார்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றப்பிரிவினா் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் காமேஷ் முருகன். இவா் இணையதளத்தில் முதலீடு செய்தால் வட்டியுடன் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால் அதற்கான வட்டி அளிக்கப்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த காமேஷ் முருகன் நுண்குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் நுண்குற்றப்பிரிவினா் நடத்திய விசாரணையில் காமேஷ் முருகன் அளித்த பணம் தனியாா் நிறுவனக் கணக்கில் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து தனியாா் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை நாங்கள்  முடக்கியதோடு, அதை மீண்டும் காமேஷ் முருகன் கணக்கில் சோ்க்க நடவடிக்கை எடுத்து அதற்கான உத்தரவைப் பெற்றோம். இதனை தொடர்ந்து பணம் திரும்ப காமேஷ்முருகன் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான வங்கி உத்தரவை நுண்குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்ழ் அருண்  அவரிடம் வழங்கினாா் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Embed widget