வீட்டு வேலையின் போது நோட்டம்! தாய் - மகள் கொலையில் வெளியான அதிர்ச்சி! சிக்கிய தொழிலாளர்கள்!
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலையை தாக்கி கொலை செய்துள்ளனர். தடயத்தை மறைக்க தீயிட்டு எரித்து விட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே சுகாதார பணி பெண் காளியம்மாள் (58), அவரது மகள் மணிமேகலை (34), ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் காளியம்மாள், மண்டபம் முகாம் உமையாள்புரத்தில் புதிய வீடு ஒன்று கட்டி வந்துள்ளார். அந்த கட்டட வேலைகளில் புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காளியம்மாள் குடியிருந்த ரயில்வே குடியிருப்பில் சிதைந்த தரை தளத்தை 4 பேரும் கடந்த 3 வாரங்களுக்கு முன் பூசும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மாளிடம் இருந்த நகை, பணத்தை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இந்த 4 பேரில் 3 பேர் மட்டும் கடந்த 6ம் தேதி நள்ளிரவு 11:30 மணியளவில் அரிவாள், இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் காளியம்மாள் வீட்டின் பின்புற வாசல் வழியாக சத்தமின்றி உள்ளே புகுந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த காளியம்மாள், மணிமேகலையை தாக்கி கொலை செய்துள்ளனர். தடயத்தை மறைக்க தீயிட்டு எரித்து விட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியுள்ளனர்.

போட்டோவுடன் கூடிய இருவரின் இறப்பு செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்த, காளியம்மாள் வீட்டில் வேலை பார்த்த அகதி ஒருவர், தன்னுடன் வேலை பார்த்த மற்ற 3 பேர் மீது சந்தேகம் உள்ளதாக மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி போலீசார் விசாரித்தனர். மண்டபம் முகாமில் வசித்து வரும் புதுக்கோட்டை அகதிகள் முகாம் சசிகுமார் 35, கரூர் மாவட்டம் குளித்தலை அகதிகள் முகாம் ராஜ்குமார் (எ) சம்பூர்ணலிங்கம் 30 ஆகியோரை மண்டபம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தங்க வளையல் 4, செயின் 2, தோடு 2 ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய நிஷாந்தனை தேடி வருகின்றனர். இந்நிலையில், தாய், மகள் எரித்து கொல்லப்பட்ட இடத்தை தென் மண்டல ஐஜி அன்பு, ராமநாதபுரம் எஸ்பி உள்ளிட்டோர் பார்வையிட்டு, காளியம்மாள் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து தெரிவித்த போலீசார், வீட்டில் நகை, பணம் உள்ளிட்டவர்களை கொள்ளை அடித்துவிட்டு, இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த துணிகளை கீழே போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துஎரித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என்றனர்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















