மேலும் அறிய

Nellai: அதிகாரிகளின் சான்றிதழ் பெற்றே கிரைய ஒப்பந்தம்; நீதிமன்றத்தை நாடுவேன் - நயினார் பாலாஜி

நிலத்தை பத்திர பதிவு செய்ததாக பொய்யாக அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி பாஜக கட்சியில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் பாஜக நிர்வாகி நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவருடன் சேர்ந்து மோசடியாக பத்திரப்பதிவு செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் நயினார் பாலாஜி மீது குற்றம் சாட்டி இருந்தது. மேலும் இளையராஜா சட்டத்துக்கு புறம்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  இடத்தையும் அதனுடன் சேர்ந்து விருகம்பாக்கம் இடத்தையும் நயினார் பாலாஜிக்கு கிரயம் செய்து கொடுத்ததாக கூறப்பட்டது. மோசடி தொடர்பான  ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமைச் செயலர், சென்னை காவல்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர், செயலர் மற்றும் வருவாத செயலருக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில்  அது குறித்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் நயினார் பாலாஜி பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்ட உத்தரவை இன்று ராதாபுரம் பத்திர பதிவுத்துறை துணை தலைவர் அதிரடியாக ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் பாலாஜி 100 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக வெளியான இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் நயினார் பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறும் பொழுது, “பலர் 77 A பிரிவை தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் 77 A இன் படி எந்த பத்திரத்தையும் ரத்து செய்யக்கூடாது அதில் உள்ள நல்லது கெட்டதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு தான் உள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவிற்கு பின் ஒரு மாதம் கழித்து என்னுடைய பத்திரத்தை அதே 77A க்கு உட்பட்டு ரத்து செய்துள்ளனர்.

ஒரே அதிகாரி இரு வேறு நேரங்களில் இரு வேறு முடிவுகளை அறிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் ஆவணங்களை அரசிடமிருந்து தான் பெற்றுள்ளோம். எனவே இதை நீக்கியது செல்லாது. இனி நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ள உள்ளோம். ரூ.46 கோடி மதிப்புள்ள நிலத்தை 100 கோடி என்றும் நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்ட நிலையில் நிலத்தை பத்திர பதிவு செய்ததாக பொய்யாக அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். இந்த நிலம் வாங்குவதில் சட்டபூர்வமாக எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறியது தமிழக அரசு வழக்கறிஞர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் இது சம்பந்தமான ஆவணங்களை அளித்ததன் அடிப்படையில் தான் நிலம் வாங்க கிரைய ஒப்பந்தம் போடப்பட்டது.  நிலத்தை அதற்குள் பத்திர பதிவு செய்து மோசடி செய்ததாக பொய்யாக குற்றஞ்சாட்டுவது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியே என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றார்


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget