மேலும் அறிய

இந்தாண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி; நெல்லையில் 60 இடங்களில் தொடங்கியது

குளங்களை பொதுமக்கள் தண்ணீர் இருக்கும் பகுதிகளாக மட்டும் பார்க்காமல் பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதிகளாக பார்க்க வேண்டும்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெறும்.  அதன்படி 14-வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி, மணிமுத்தாறு, சிற்றாறு நதியின் 60 பாசன குளங்களில் இன்றும், நாளையும் அகஸ்தியமலை உயிர்கோள காப்பகம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆறு குழுக்களாக பிரிந்து நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் உள்ள குளங்களில் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதில் பறவைகளின் எச்சம், கால்தடம், கூடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் இந்த கணக்கெடுப்பு பணியின் போது பறவைகளின் இனம், கூடுகள், குஞ்சுகள் மற்றும் பறவைகளின் வகை என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. அதன் படி தொலை நோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் பறவைகளை இனம் கண்டு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வரும் கணக்கெடுப்பு பணியின் போது அதிக அளவில் நீர்காகம், சம்பு கோழி, சாம்பல் நாரை, பிளமிங்கோ, அல்லிக்குருவி போன்றவை காணப்படுவதாக கணக்கெடுப்பு பணியில் கலந்து கொண்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, நெல்லை மாநகரப் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய குளமான நயினார் குளத்தை சுற்றி இருக்கும் மருத மரம், இலுப்பை மரம், நீர்க்கடம்பை மரங்களில் பாம்பு தாரா வகை பறவைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகிறது. குறிப்பாக இந்த வகை மரங்களில் கூடுகட்டி பாம்புதாரா பறவைகள் குஞ்சு பொரித்து இருப்பதையும் காண முடிகிறது. அல்லி குருவிகள் குஞ்சுகளுடன் அதிகளவு இருப்பதையும் காணமுடிகிறது. இது தவிர ஐரோப்பியாவை சேர்ந்த ஆலா இன பறவைகளும், மன்கோலிய நாட்டை சார்ந்த வரிதலை வாத்தினங்களும் கணக்கெடுப்பில் அதிக அளவு காணபட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் நிலையில் உள் நாட்டு வெளிநாடு பறவைகள் குறித்த கணக்குகள் கிடைக்க பெறும். கடந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின் போது 38 ஆயிரம் பறவைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. குளங்களை பொதுமக்கள் தண்ணீர் இருக்கும் பகுதிகளாக மட்டும் பார்க்காமல் பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதிகளாக பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அரசிற்கு வைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget