மேலும் அறிய

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்

சதீஷ் கடந்த 10 வருடங்களாக குளச்சலை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடல் வழியாக பல மாநிலங்களுக்கு சென்று மீன்பிடித்து வருவதாகவும் பெருவாரியான நேரங்களில் கடலில் கழித்து வருவதும் தெரியவந்தது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி இறஞ்சிலி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (32) மீனவரான இவருக்கு ரீனா என்ற பெண்ணுடன் திருமணமாகி சதீஷின் செயல்பாடுகள் பிடிக்காமல் போக ரீனா பிரிந்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தனிமையில் இருந்து வந்த சதீஷ் அவ்வப்போது கடலில் நண்பர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்க சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 2012 -ஆம் ஆண்டு அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சதீஷை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் திடீரென சதீஷ் தலைமறைவாகி விட்டார்.
 

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்
 
பின்னர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் சதீஷை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் சதீஷை சல்லடை போட்டு தேடி வந்தனர் இருந்தும் அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளியான சதீஷ் குறித்த ஒருசில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன அதில் சதீஷ் கடந்த 10 வருடங்களாக குளச்சலை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கடல் வழியாக பல மாநிலங்களுக்கு சென்று மீன்பிடித்து வருவதாகவும் பெருவாரியான நேரங்களில் கடலில் கழித்து வருவதும் தெரியவந்தது.
 
மேலும் அவ்வப்போது பள்ளியாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் நேற்று இரவு சதீஷ் வீட்டுக்கு வருவதை தெரிந்து கொண்டு அவரது வீட்டை போலீசார் கட்டுபாட்டில் கொண்டு வந்து கண்காணித்து வந்த வேளையில் சீதீஷ் நள்ளிரவு நேரத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் எல்லாம் தூங்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார் இதனை கண்ட போலீசார் சதீஷை சுற்றி வளைத்துள்ளனர் உடனே அங்கிருந்து சதீஷ் தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் போலீசார் அவரை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.இதனையடுத்து 10 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து போலீசாருக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்து வந்த சதீஷ்-ஐ போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
புலியூர்குறிச்சியில் நர்ஸரி கார்டன் ஊழியரிடம் 5 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
 
கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் இவர் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் பூ செடிகள் விற்பனை செய்யும் நர்ஸரி கார்டன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கார்டனில் வட்டம் பகுதியை சேர்ந்த சாந்தாபாய் என்ற பெண் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் சாந்தாபாய் கார்டனுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பூ செடிகளை காண்பித்து அவற்றின் விலைகளை சொல்லி கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய இரண்டு மர்ம நபர்களில் ஒருவன் கைக்குட்டையால் முகத்தை மறைத்து கார்டனுக்குள் வந்து சாந்தாபாய் இடம் பூச்செடிகளின் விலைகளை கேட்டுள்ளார். சாந்தாபாய் விலைகளை சொல்லி கொண்டிருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைது கழுத்தில் கிடந்து 5-சவரன் தங்க சங்கிலியை அந்த மர்ம நபர் அறுத்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார்.
 

பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியவரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிய கன்னியாகுமரி போலீஸ்
 
சாந்தாபாய் சில மீட்டர் தூரம் சத்தம் போட்டு கொண்டே துரத்தி ஓடினார் இருப்பினும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தாபாய் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் டி.எஸ்.பி கணேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது புல்லட் வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவன் முகத்தில் கைக்குட்டையை அணிந்து நீல நிற பேன்ட் சட்டையுடன் வரும் நபர் தங்க சங்கிலியை அறுத்து தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தது இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகைள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Thailand Cambodia Dispute: மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
Embed widget