மேலும் அறிய

’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு

’’இன்றைக்கு சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள், பேசுகிறார்களே தவிர அதை செய்வதில்லை’’

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டம், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மகாகவி பாரதியார் குறித்த புகைப்பட கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார். சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நூல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழிய பாரத மணித்திரு நாடு என்ற மின்னூலையும் வெளியிட்டார்.

                            ’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, பாரதியார் பிறந்த மண்ணில் நிற்பதை நினைத்தால் உள்ளம் நடுங்குகிறது. அவரது ஒவ்வொரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்த்தால் அவரால் எப்படி இவ்வாறு பாட முடிந்தது என்று தான் தோன்றுகிறது. ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர். அதற்காக தன்மானத்தை விட்டு, எங்காவது ஏதாவது உழைக்கிறேன் என்றில்லாமல், தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை கூட எழுதி இந்த நாட்டுக்கு ஒரு உணர்ச்சி உண்டாக்க வேண்டும். மக்களை எழுப்ப வேண்டும் என முயற்சி பண்ணினார்.

                           ’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு
                                                                                        (bharathiyar honour)
அந்த காலத்தில் பெண்களுக்கென தனி பத்திரிகை நடத்தியவர். அவரை ஏராளமானோர் கிண்டல் செய்தனர். அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. தனது மனைவியை அழைத்துச்செல்லும் போது, அவரது தோளில் கைவைத்து, தோழனுடன் நடப்பது போல் நடப்பார். இன்றைக்கு சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள், பேசுகிறார்களே தவிர அதை செய்வதில்லை. அவரது வார்த்தைகள் சக்தி என்றால், அவருக்கு உள்ளே இருந்தது வைரம் மாதிரியான பலம். ஏழ்மை, ஏளனம் என்னை தாக்காது. மற்றவர்களின் ஏளனத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. நீ சொல்வதை சொல். எனது வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னை தாக்கும் என்றார். அவரது பாடல்களை இன்றைக்கு நாம் பாடினாலும் உணர்ச்சி எழும்பும். நாட்டு பற்றி இப்பேர்பட்ட பாடலை பாடியுள்ளாரே, அதுவும் சக்தி வாய்ந்த மொழி தமிழில் பாடியுள்ளார். 
 
பாரதியார் ஆன்மீகத்தில் திளைத்தவர். பராசக்தி என்று பேசுவார். ஆனால், கிருஷ்ணனை பற்றிய எண்ணம் வந்தவுடன், கண்ணனை தந்தை, தாய் என எல்லாவிதத்திலும் பார்த்து அனுபவித்த மாதிரி பாடல்களை பாடினார். 38 வயது தான் வாழ்ந்தார். ஆனால், அதற்குள் அவரது உடம்புக்குள் உள்ள எரிமலையை என்ன விதங்களிலும் எடுத்து கூறினார் என்று பார்த்தால், ஒவ்வொரு கவிதையும் ரத்தினங்களாக மின்னுகிறது. இந்த நாடு அவருக்கு என்ன கொடுத்தது. 

                                    ’பாரதியின் மண்ணில் நிற்பது உள்ளம் நடுங்குகிறது’- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டயபுரத்தில் பேச்சு
                                                                              (bharathiyar house)
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் இன்னும் நிறைய பண்ணலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.  இங்கே 1947 இல் ஒரு மணிமண்டபம் அமைத்து, பாரதியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. அதனை வங்காளத்தின் ஆளுநராக இருந்த மூதறிஞர் ராஜாஜி திறந்து வைத்தார். அதன் பின்னர் இந்த மணிமண்டபம் திறக்கின்ற வரைக்கு என்ன நடந்தது என்று நமக்கு தெரியாது. அப்போது இருந்த மணிமண்டபம் என்னாச்சு என்றும் தெரியவில்லை. கல்கி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர், எட்டயபுரத்தை சேர்ந்த மக்கள், மதுரை சேதுபதி பள்ளி மாணவர்கள் பணம் கொடுத்து, மணிமண்டபத்தை கட்ட வேண்டும் என கூறினர். மூதறிஞர் ராஜாஜியே வந்து கட்டிக்கொடுத்துள்ளார். அப்போதே அந்த முயற்சி நடந்துள்ளது. ராஜாஜியை எட்டயபுரம் மக்கள் மறந்துவிடவில்லை. 
 
அதன்பின்னர் கூட பாரதியார் பற்றி தேசிய அளவில் எடுத்துச்சொல்ல வேண்டும் என ஏராளமானோர் முயற்சி எடுத்துள்ளனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காசி விஸ்வவித்யாலயம் பல்கலைக்கழகத்தில், தமிழுக்கு ஒரு இருக்கை அமைத்துள்ளார். எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், காசிக்கு போய் சமஸ்கிரதம், இந்தி, ஆங்கிலம் என அனைத்தையும் கற்று வந்து, யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போன்று இனிதாவது எதுவுமில்லை என கவிதை இயற்றினார். அதனால் தமிழுக்கு ஒன்றும் நஷ்டமாகவில்லை. அதன் பின்னர் அமுதாமான கவிதைகளை இயற்றி கொடுத்துள்ளார். தமிழை வளர்க்க வேண்டும். அதில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்து, அதற்கு சுப்பிரமணிய பாரதியார் பெயரை சூட்டி  நேற்று பிரதமர் அறிவித்துள்ளார். பாரதியார் புகழை எட்டயபுரம் மக்கள் காப்பாற்றி வருகின்றனர். தேசிய அளவில் பிரதமரே திரும்ப திரும்ப பாரதியார் குறித்து பேசி வருகிறார். பாரதியாரின் புகழ் உலகளவில் உள்ளது. இன்னும் இந்த மணிமண்டபத்தை சிறப்பாக வைக்கலாம். அங்குள்ள பொருட்களை இன்னும் அழகாக வைத்து காண்பிக்கலாம். நாடு முழுவதும் பாரதி பற்றி எடுத்துச்சொல்வோம். 
 
பள்ளிகளில் உள்ள சின்னசிறு பிள்ளைகளுக்கு பாரதியாரின் பாடல்களை கற்றுக்கொடுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த 100 ஆவது ஆண்டு நினைவு முன்னிட்டு, நமது பிள்ளைகளுக்கு பாரதியின் கவிதைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது. பாரதியாரின் பாடல்கள் போட்டிகள் வைத்து, பரிசுகள் வழங்குங்கள். பாரதியை பாடுவது மூலமாக நாட்டுப்பற்று வளரும். அவர் அனுபவித்து கஷ்டங்கள் போல் யாரும் அனுபவித்திருக்க முடியாது. இருந்தாலும் இந்த நாடு என்ன செய்தது என்று கேட்டாமல், நாடு நல்லாயிருக்க வேண்டும். பாரத தாய் ஒரு தாய் தான். ஆனால் அவர் பல மொழிகளில் பேசுவாள் என்றளவுக்கு பாரத தாயை அனுபவித்து பாடியுள்ளார், அதனால் பாரதியை மறக்க கூடாது. அவர் எட்டயபுரத்து சொத்து. அந்த சொத்து பகிர்ந்து கொடுக்கும் போது அது வளரும், என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget