மேலும் அறிய

உப்பாற்று ஓடையில் மீன் கழிவுநீரை கலக்கிய மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் - மூட உத்தரவு

மீன் பதப்படுத்தும் ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே உப்பாற்று ஓடையில் கலந்தது தெரியவந்தது. 3 ஆலைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உப்பாற்று ஓடையில் கழிவுநீரை கலந்தது தொடர்பாக 3 தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 


உப்பாற்று ஓடையில் மீன் கழிவுநீரை கலக்கிய மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் - மூட உத்தரவு

தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் உள்ள உப்பாற்று ஓடை அருகே 6-க்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில ஆலைகள் மீன்களை பதப்படுத்துவதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் நேரடியாக கலப்பதாக புகார் எழுந்தது. 

இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு உப்பாற்று ஓடை தண்ணீர் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.


உப்பாற்று ஓடையில் மீன் கழிவுநீரை கலக்கிய மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் - மூட உத்தரவு

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆகியோர் உப்பாற்று ஓடை பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் நல பொறியாளர் சத்தியராஜ் தலைமையிலான அதிகாரிகள் உப்பாற்று ஓடையில் ஆய்வு நடத்தினர். மேலும் உப்பாற்று ஓடை தண்ணீரை பரிசோதனை செய்தனர்.


உப்பாற்று ஓடையில் மீன் கழிவுநீரை கலக்கிய மீன்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் - மூட உத்தரவு

இதில் அந்த பகுதியில் உள்ள 3 மீன் பதப்படுத்தும் ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே உப்பாற்று ஓடையில் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 3 ஆலைகளுக்கான மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க மின்சார வாரியத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. அதன்பேரில் 3 ஆலைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று மீன் பதப்படுத்தும் ஆலைகளையும் மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget