மேலும் அறிய

கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியங்கள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

பேரிடர் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் வரையப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 


கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியங்கள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

புயல், மழை, மின்னல், வெள்ளம், சுனாமி, பூகம்பம், தீவிபத்து, கட்டிட விபத்து போன்ற பேரிடர்கள் நடைபெறும் போது மக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியங்கள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

தூத்துக்குடி மாவட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.39.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பேரிடர் மேலாண்மை தொடர்பாக துண்டு பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதுபோல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்படும். ஆனால், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த நிதியை கொண்டு வித்தியாசமான முறையில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளது. பேரிடர் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மேலும், பேரிடர் காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விபரங்கள் தகவல்களாக எழுதப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் இந்த வண்ண ஓவியங்கள் பளிச்சிடுகின்றன. அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் இதில் இடம் பெற்றுள்ளன.


கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியங்கள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறும்போது, “பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்தாலோ அல்லது ஒலி பெருக்கி மூலம் அறிவித்தாலோ மக்கள் அதனை விரைவாக மறந்துவிடுகின்றனர். புயல், மழை, மின்னல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த விபரங்கள் மக்கள் மனதை விட்டு நீண்ட நாட்களுக்கு நீங்காமல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அதனை கருத்தில் கொண்டு தான் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுவர்களில் ஓவியங்களை வரையவும், தகவல்களை எழுதி வைக்கவும் முடிவு செய்தோம்.


கிராம நிர்வாக அலுவலக சுவர்களில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஓவியங்கள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

பேரிடரால் அதிகம் பாதிக்கப்படக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள மீளவிட்டான் 1 மற்றும் 2, கோரம்பள்ளம் 2, முள்ளக்காடு 1, கொங்கராயக்குறிச்சி, காயல்பட்டினம், ஆத்தூர், புன்னக்காயல், ஆழ்வார்திருநகரி, முக்காணி, திருக்களூர், அங்கமங்கலம், பழையகாயல், காந்தி நகர், இலுப்பையூரணி, சன்னது புதுக்குடி, வைப்பார், பெரியசாமிபுரம், வாலசமுத்திரம் மற்றும் கீழ அரசடி ஆகிய 19 கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் இத்தகைய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

இந்த ஓவியங்கள் மற்றும் தகவல்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் வகையில் முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி கிராம மக்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அரசு சுவர்களில் தேவையற்ற போஸ்டர்கள் ஒட்டப்படுவதால், அவைகள் நாசமடைவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அதற்கு இந்த முயற்சி நிச்சயம் முடிவு கட்டும். இதேபோல் அரசின் உதவிகளை மக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் பெறுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள், தகவல்களையும் அரசு சுவர்களில் வரைய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget