மேலும் அறிய

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை.

மேலப்பாளையத்தில் உள்ள நான்கு பேர் வீடுகளிலும், தனித்தனியாக  கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பான வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை  மேலப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சார இயக்க நிர்வாகி முகமது உசேன் மண்பேயிடம் நெல்லை காவல்துறையினர் சுமார் 3 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை.

விசாரணை முடிவு பெற்ற நிலையில் அவரது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் தேவைப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் முகமது உசேன் மண்பேயிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.  தொடர்ந்து அங்கு  குவிக்கப்பட்ட காவல்துறையினரும் திரும்ப பெறப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும்  மாநகர காவல் துறை ஆணையர் அபினேஷ் குமார் உத்தரவின் பேரில்  மேலப்பாளையம் பகுதியில் நான்கு வீடுகளில் பல்வேறு குழுக்களாக காவல்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக மேலப்பாளையம் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி(35), சையது முகமது புகாரி(36), முகமது அலி(38), முகமது இப்ராஹிம்(37) ஆகிய 4 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக   முகமது அலி,  ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும், அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட  நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.  


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை.

இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள நான்கு பேர் வீடுகளிலும், தனித்தனியாக  கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்  நான்கு பேரின்  செல்போன் மற்றும் குடும்பத்தினர் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்த செல்போனில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்து கொண்டனர். மேலும்  இவர்கள் யாருடன் பேசினார்கள்? என்ன பேசினார்கள் என்பது குறித்தும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் வீடுகளிலும் சுமார் 4 மணிநேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் சிக்காத நிலையில் திரும்பி சென்றனர். இந்த சோதனையின் காரணமாக மேலப்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget