மேலும் அறிய

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை.

மேலப்பாளையத்தில் உள்ள நான்கு பேர் வீடுகளிலும், தனித்தனியாக  கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பான வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை  மேலப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சார இயக்க நிர்வாகி முகமது உசேன் மண்பேயிடம் நெல்லை காவல்துறையினர் சுமார் 3 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை.

விசாரணை முடிவு பெற்ற நிலையில் அவரது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் தேவைப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் முகமது உசேன் மண்பேயிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.  தொடர்ந்து அங்கு  குவிக்கப்பட்ட காவல்துறையினரும் திரும்ப பெறப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும்  மாநகர காவல் துறை ஆணையர் அபினேஷ் குமார் உத்தரவின் பேரில்  மேலப்பாளையம் பகுதியில் நான்கு வீடுகளில் பல்வேறு குழுக்களாக காவல்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக மேலப்பாளையம் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி(35), சையது முகமது புகாரி(36), முகமது அலி(38), முகமது இப்ராஹிம்(37) ஆகிய 4 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக   முகமது அலி,  ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும், அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட  நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.  


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரிடம் விசாரணை.

இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள நான்கு பேர் வீடுகளிலும், தனித்தனியாக  கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்  நான்கு பேரின்  செல்போன் மற்றும் குடும்பத்தினர் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்த செல்போனில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்து கொண்டனர். மேலும்  இவர்கள் யாருடன் பேசினார்கள்? என்ன பேசினார்கள் என்பது குறித்தும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் வீடுகளிலும் சுமார் 4 மணிநேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் சிக்காத நிலையில் திரும்பி சென்றனர். இந்த சோதனையின் காரணமாக மேலப்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget