மேலும் அறிய

Amudha IAS : காவல்துறை அதிகாரி பல் பிடுங்கிய விவகாரம்: காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமுதா ஐஏஎஸ்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை காவல் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்தது. 

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்களை காவல் அதிகாரி பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்தது. 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. அவர் ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இவர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். ஆனால் முதல் நாளில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேசமயம் மேலும் நேரில் ஆஜராக முடியாதவர்கள் தொலைபேசி வாயிலாகவோ, இமெயில் வாயிலாகவோ, வாட்ஸஅப் மெசேஜ் அல்லது வாட்ஸஅப் ஃபோன் மூலம் வாக்கு மூலத்தை  பதிவு செய்யலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இரண்டாவது கட்ட விசாரணையை அமுதா நேற்று (ஏப்ரல் 17) மீண்டும் தொடங்கினார். இந்த சம்பவத்தில் விசாரணைக்கு வருபவர்கள் போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வருவதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அனைத்து காவல்துறையினரையும் வெளியேற வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

நேற்று 11 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இன்றும் மீதமுள்ள 3 பேரிடம் விசாரணை தொடர்ந்த நிலையில் மாலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் விசாரணை அதிகாரி  அமுதா சம்பந்தப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்ததோடு அங்கிருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார். முன்னதாக காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது நேற்று 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசனிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பல்வீர்சிங் மீது  4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக கருத்து தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget