மேலும் அறிய

நெல்லையில் நடந்த போராட்டத்திற்கு 10 பேரை திரட்டவே படாது பாடுபட்ட அதிமுக..! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்காக நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க மிக குறைவான எண்ணிக்கையிலையே அதிமுகவினர் கலந்து கொண்டது கடைநிலை தொண்டர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 50க்கும் மேற்பட்ட பலியான விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர் ஆனால் போராட்டத்தில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் வரவில்லை.

தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில நிர்வாகி அன்பு அங்கப்பன் தலைமையில் சுமார் 10 பேர் மட்டும் கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை அருகில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர். ஆனாலும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதால் குறைந்தபட்சம் 50 பேராவது இருந்தால் தான் நன்றாக இருக்கும் என எண்ணிய அன்பு அங்கப்பன் மற்ற நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து உடனே வரும்படி கூறினார். ஆனாலும் கடைசி வரை யாரும் வரவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் 10 பேரை வைத்து நெல்லை தென்காசி சாலையில் கொக்கிரக்குளம் எம்ஜிஆர் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். குறிப்பாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும், தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும், திமுக அரசே ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். 


நெல்லையில்  நடந்த போராட்டத்திற்கு 10 பேரை திரட்டவே படாது பாடுபட்ட அதிமுக..! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பல்வேறு தொகுதிகளில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக இதே நெல்லை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். எனவே தமிழகத்தில் அதிமுக வலுவிழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வரும் நிலையில் மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்காக நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க மிக குறைவான எண்ணிக்கையிலையே அதிமுகவினர் கலந்து கொண்டது கடைநிலை தொண்டர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget