மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - கணவருக்கு 14 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமை இளம்பெண் 2 குழந்தைகள் தற்கொலை : கணவர் மற்றும் அவரது தம்பிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை.

தேங்காய்பட்டணம் அருகே வரதட்சணை கொடுமையால் ரயில் முன்பு பாய்ந்து இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் அவரது தம்பிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்பளித்தது.
 
தேங்காய்பட்டணத்தை அடுத்த வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் அஜிதா(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஜிதாவுக்கு 38 பவுன் நகையும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களும் 7 பவுன் தங்கச்சங்கிலியும் மாப்பிள்ளை ஜெஸ்டின்சனுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்சன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசியர் பணிக்காக 3 லட்சம் ரூபாய் தேவைபட்டது.
 

வரதட்சணை கொடுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - கணவருக்கு 14 ஆண்டு சிறை

இதற்காக அஜிதாவிடம் கூடுதல் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதா கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி கணவர் வீட்டில் இருந்து தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு மதியம் 12.30 மணியளவில் கன்னங்கோடு என்ற வழியாக செல்லும் ரயில்வே ட்ராக்கில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அஜிதாவின் பெற்றோர் புதுக்கடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மொத்தம் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அஜிதாவின் கணவர் ஜெஸ்டின்சன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டியதாக பத்து ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டதற்காக இரண்டு ஆண்டும், அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக இரண்டு ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனையும்,15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.
 
 

 

கன்னியாகுமரி அருகே சுற்றுலா வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதிய பதைபதைக்கும் சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பள்ளிக் குழந்தைகள் இல்லாத நிலையில் சுற்றுலா வாகனத்தில் வந்த 7 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.
 

வரதட்சணை கொடுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - கணவருக்கு 14 ஆண்டு சிறை
 
 
கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியில் புனித ஜோசப் கலாசன்ஸ் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம் மாணவ, மாணவிகளை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு பள்ளிக்கு அதி வேகமாக வந்த போது எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் இரண்டு வேன்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தன. இதில் மகாராஷ்டராவில் இருந்து கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் 18 பேரில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விபத்திற்கான சிசிடிவி பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்பு செய்திகள்

ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget