மேலும் அறிய

Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 600 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி - விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.


Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

இதனைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கிள்ளிகுளம் வேளாண் ஆராய்ச்சி கல்லூரி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து விவசாய வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளது. பனைமரங்கள் நிறைய பயன்தரக்கூடியவை. மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குட்டை வகை பனைமரங்கள் கொண்டு வரப்பட்டு கிள்ளிகுளம் வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த குட்டை வகை பனைமரங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் உள்ள 8 கோடி பனைமரங்களில் 5 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. அதிலும் 2 கோடி பனைமரங்கள் தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ளன. பதநீரை ஒரு மாதம் அளவுக்கு சேமித்து சந்தைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் இங்கு செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பெருக்கிக்கொள்ள உதவும்.



Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

நடைபெறும் கண்காட்சியில் மாப்பிள்ளை சம்பா, கவுணி அரிசி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அற்புதமான சக்தி கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை இவ்வகையான நெல் ரகங்களை பயிரிட வைக்க வேண்டும். நமது மாவட்டத்தில் 600 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் பாரம்பரிய நெல் விதைகள் நெல் பயிரிடும் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மூலமாக புதிதாக பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும்.


Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்தான் அனைத்து வகையான விவசாயமும் செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் 1.60 இலட்சம் ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பயிர்கள், வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றுப்பாசனம் மூலம் 46,000 ஏக்கர் பரப்பில் நெல், வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 4 வரத்து கால்வாய்கள், 52 தடுப்பணைகள், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகள் உள்ளன. சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெறுகிறது. 21 கடலோர கிராமங்களில் பனைமரங்கள் அதிக அளவில் உள்ளன. 


Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

நெல் மட்டுமல்லாமல் அனைத்து பயிர்களிலும் பாரம்பரிய ரகங்களை அழியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இயற்கையாகவே பாரம்பரிய ரகங்களில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மேலும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள், கூடுதலாக உரங்கள் தேவையில்லை. நமது சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. பாரம்பரிய ரகங்களை சந்தைப்படுத்தினால் அதிக அளவில் மக்கள் வாங்குவார்கள். எனவே விவசாயிகள் பாரம்பரிய ரகங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


Thoothukudi: வல்லநாட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

வல்லநாடு பகுதியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் 100 நாள் வேலை திட்டம் மூலம் காட்டுப்பன்றிகள் வசிக்கும் உடைமரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அடுத்த பருவத்தில் விவசாயத்திற்கு பன்றிகள் தொல்லை இருக்காது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் பழனிவேலாயுதம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடிமணி, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர்,கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உழவியல் துறை தலைவர் சோலைமலை, பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை, பயிர் மரபியல் துறை தலைவர் ரிச்சர்டு கென்னடி, வாகைக்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Embed widget