மேலும் அறிய

School College Leave: மழை வெள்ளத்தில் இருந்து மீளாத தூத்துக்குடி; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. 

சமீபத்தில் பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் தென் தமிழ்நாட்டினைச் சேர்ந்த மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தது. இதில் பேரழிவை எதிர்கொண்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் உள்ளது. இப்படியான நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, இன்று அதாவது டிசம்பர் 22ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். 

அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. தற்போது பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. இருப்பினும், சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.  இந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவராணம் அறிவித்துள்ளார். 

நிவாரணம் அறிவிப்பு:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தென்மாவட்டங்களை புரட்டி எடுத்தது. இந்தநிலையில்,  சென்னையில் அறிவித்தது போலவே  தென்மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தென்மாவட்டங்களில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவாரணமாக வழங்கப்படும்.  நெல்லை, தூத்துக்குடியில் கடுமையாக பாதிக்கப்பட்ட தாலுகா மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும். கன்னியாகுமரி, தென்காசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும்.

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும்.  வெள்ளத்தால் உயிரிழந்த எருது, பசுக்களின் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும்.  முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள் ரூ.50,000 வழங்கப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அதிகபட்ச மானியத் தொகை ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படகுகளுக்கு மானிய தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

எப்படி பெறுவது?

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையை ரேசன் கடைகளில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம். ரேசன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினால் ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இந்த நிவாரணம் தொகை 10 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேசன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை படிவும் வழங்ப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,  தென்மாவட்டங்களில் அதிகம் பாதித்த தாலுகா மக்களுக்கு தான் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget