மேலும் அறிய

குளங்களில் வண்டல் மண் எடுக்கனுமா?; அப்போ இதை பாலோ பண்ணுங்க - தூத்துக்குடி ஆட்சியர் சொன்ன தகவல்

விவசாயிகள் வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பித்த நாளின் முன்னுரிமை அடிப்படையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுருளிமலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது, குளங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் மண்வள பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும். கோரம்பள்ளம் குளத்தில் வண்டல் மண் அதிக அளவில் நிரம்பி உள்ளன. இதனால் குளத்தில் அதிக நீரை தேக்க முடியாத நிலை உள்ளது. குளங்களில் ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே வண்டல் மண் அள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அது போதுமானதாக இருக்காது. கடந்த ஆண்டு மழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளோம். தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது. ஆகையால் குளங்களில் உடைப்புகளை விரைந்து சீரமைத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த 2023 ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதிக்கு முன்பு பயிர் காப்பீடு செய்தவர்களில் சிலருக்கு பயிர் ஆய்வுகள் எதுவும் நடத்தாமல் உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு தொகை விடுவிக்க வேண்டும் என்றனர்.


குளங்களில் வண்டல் மண் எடுக்கனுமா?; அப்போ இதை பாலோ பண்ணுங்க - தூத்துக்குடி ஆட்சியர் சொன்ன தகவல்

கூட்டத்தில் ஆட்சியர் லட்சுமிபதி பேசும் போது, தமிழக அரசு முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற வேண்டும். அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களுக்கான மண்வள அட்டை பெற வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு வண்டல்மண், கரம்பை மண் பெறும் முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் விவசாய பயன்பாட்டுக்காக கட்டணம் இல்லாமல் வண்டல் மண், களிமண் எடுப்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விணணப்பித்த நாளின் முன்னுரிமை அடிப்படையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். நில சர்வே எண், நில பரப்பு, நில வகைப்பாடு ஆகியவை தாசில்தாரால் ஆய்வு செய்யப்பட்டு 10 நாட்களுக்குள் அந்தந்த தாசில்தார் மூலமாக வண்டல் மண் எடுக்க அனுமதி உத்தரவுகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணங்கள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். தாசில்தார் அனுமதி வழங்கிய உடன் அனுமதிக்கப்பட்ட வண்டல் மண்ணை குளத்தின் பொறுப்பு அலுவலர் ஒப்புதலுடன் விவசாயிகள் எடுத்தக் கொள்ளலாம். வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி காலம் 20 நாட்களில் இருந்து 30 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மண் எடுக்க அனுமதிக்கப்பம். அதிகாரிகளால் குறியீடு செய்யப்பட்ட இடத்தில், அனுமதிக்கப்பட்ட ஆழத்தில் மட்டுமே அனுமதி பெற்றவர்கள் மண் எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுத்தபின்பு நடைச்சீட்டை பெற்று வண்டல் மண் எடுத்து செல்லும் வாகனத்துடன் கொண்டு செல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு 644 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, கூடுதலாக நீர்நிலைகளை சேர்த்து அரசிதழிலில் வெளியிடப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 2023 மாதம் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக 9 ஆயிரத்து 988 விவசாயிகளுக்கு ரூ.14.55 கோடி இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பயிர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வழங்கப்பட்ட நிவாரணம் கழித்து வழங்கப்படும்.

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த முறைகேட்டில் ரூ.13 கோடி வைப்புத்தொகை மோசடி செய்யப்பட்டு இருந்தது. இதில் ரூ.9 கோடி அரசிடம் இருந்து பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை, அல்லது 1-ந் தேதி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதே போன்று 261 பொட்டலங்களில் இருந்த ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருந்தன. இதில் 113 நகைகள் மற்ற வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு, மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget