மேலும் அறிய

பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

தெற்கு ஆசியாவில் கடலில் அமைக்கப்பட்ட இரயில் பாலத்தில் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி செங்குத்தான வடிவில் 700 டன் எடையுடன் கூடிய நவீனமான தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சுமார் 3 கி.மி தொலைவிற்கு 1100 டன் எடையுடன் கூடிய 11  சரக்கு பெட்டிகளுடன் தேசிக்கொடியுடன் முதன்முதலில் சோதனை ஓட்டம் 20 கிலோமீட்டர் வேகம் முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

பாம்பன் கடலில் கடந்த 1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் 113 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் உறுதித் தன்மை இழந்துவிட்டது என இந்திய ரயில்வே துறை அறிவித்தது. இதனை அடுத்து  கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய ரயில் பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு பணிகள் துரிதமாக துவங்கப்பட்டது கொரோனா தொற்றால் கடந்த 19 மாதங்களாக பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று இன்று 99 சதவீத பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

இதனையடுத்து இன்று காலை 11  மணி அளவில் 1,100 டன் எடை கொண்ட 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் புதிய பாலத்தில் 20 கி.மீட்டர் வேகம் முதல் 60 கி. மீட்டர் வேகம் வரை 4 கட்டமாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனை சென்னை கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் எக்கோ சவுண்ட் கருவி மற்றும் நவின் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். இந்த புதிய தொழில்நுட்ப பாலத்தில் இரு வழி பாதைகளைக் கொண்டது. மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கப்படும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, எனவும் பழைய ரயில் பாலத்தில் அதிகபட்சம் 20 கி.மீட்டர் வேகத்தில் பாம்பன் பாலத்தை கடந்த நிலையில் புதிய ரயில் பாலத்தில் மணிக்கு  சுமார் 80 கி. மீட்டர் வேகத்தில்  சரக்கு ரயிலை இயக்கி ஆய்வு மேற்கொண்டனர் .


பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

தெற்கு ஆசியாவில் கடலில் அமைக்கப்பட்ட இரயில் பாலத்தில் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை  பயன்படுத்தி  செங்குத்தான வடிவில் 700 டன்  எடையுடன் கூடிய   நவீனமான தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக சரக்கு கப்பல்கள் பார்ஜர்கள் கடந்து செல்லும் வசதிகளை உள்ளடக்கியதாக கொண்டுள்ளது. இதன் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பின்  வரும்  அக்டோபர் 1ம் தேதி திட்டமிட்ட படி ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறையினர் உறுதியளித்துள்ளனர்.


பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மற்றும்  வட மாநில பக்தர்களும், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும்  வர்த்தகர்கள் இரயில் சேவை இன்றி பெரும் சிரமம் அடைந்து வந்த நிலையில்  இன்றைய ரயில் சோதனை ஓட்டம் மற்றும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ரயில் சேவை துவங்கப்படும் என அதிகாரிகளின் உறுதி உள்ளிட்டவைகளால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.
திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.
விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Maruti Jimny New Variants: இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
Embed widget