மேலும் அறிய

பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

தெற்கு ஆசியாவில் கடலில் அமைக்கப்பட்ட இரயில் பாலத்தில் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி செங்குத்தான வடிவில் 700 டன் எடையுடன் கூடிய நவீனமான தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சுமார் 3 கி.மி தொலைவிற்கு 1100 டன் எடையுடன் கூடிய 11  சரக்கு பெட்டிகளுடன் தேசிக்கொடியுடன் முதன்முதலில் சோதனை ஓட்டம் 20 கிலோமீட்டர் வேகம் முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

பாம்பன் கடலில் கடந்த 1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் 113 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் உறுதித் தன்மை இழந்துவிட்டது என இந்திய ரயில்வே துறை அறிவித்தது. இதனை அடுத்து  கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய ரயில் பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு பணிகள் துரிதமாக துவங்கப்பட்டது கொரோனா தொற்றால் கடந்த 19 மாதங்களாக பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று இன்று 99 சதவீத பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

இதனையடுத்து இன்று காலை 11  மணி அளவில் 1,100 டன் எடை கொண்ட 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் புதிய பாலத்தில் 20 கி.மீட்டர் வேகம் முதல் 60 கி. மீட்டர் வேகம் வரை 4 கட்டமாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனை சென்னை கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய அலுவலர்கள் எக்கோ சவுண்ட் கருவி மற்றும் நவின் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். இந்த புதிய தொழில்நுட்ப பாலத்தில் இரு வழி பாதைகளைக் கொண்டது. மின்சாரம் மூலம் ரயில்கள் இயக்கப்படும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, எனவும் பழைய ரயில் பாலத்தில் அதிகபட்சம் 20 கி.மீட்டர் வேகத்தில் பாம்பன் பாலத்தை கடந்த நிலையில் புதிய ரயில் பாலத்தில் மணிக்கு  சுமார் 80 கி. மீட்டர் வேகத்தில்  சரக்கு ரயிலை இயக்கி ஆய்வு மேற்கொண்டனர் .


பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

தெற்கு ஆசியாவில் கடலில் அமைக்கப்பட்ட இரயில் பாலத்தில் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை  பயன்படுத்தி  செங்குத்தான வடிவில் 700 டன்  எடையுடன் கூடிய   நவீனமான தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக சரக்கு கப்பல்கள் பார்ஜர்கள் கடந்து செல்லும் வசதிகளை உள்ளடக்கியதாக கொண்டுள்ளது. இதன் பணிகள் முற்றிலும் நிறைவடைந்த பின்  வரும்  அக்டோபர் 1ம் தேதி திட்டமிட்ட படி ரயில் சேவை துவங்கப்படும் என ரயில்வே துறையினர் உறுதியளித்துள்ளனர்.


பாம்பன் புதிய பாலத்தில் எப்போது பயணிகள் ரயில் இயக்கப்படும்? - அதிகாரிகள் தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மற்றும்  வட மாநில பக்தர்களும், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும்  வர்த்தகர்கள் இரயில் சேவை இன்றி பெரும் சிரமம் அடைந்து வந்த நிலையில்  இன்றைய ரயில் சோதனை ஓட்டம் மற்றும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ரயில் சேவை துவங்கப்படும் என அதிகாரிகளின் உறுதி உள்ளிட்டவைகளால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget