மேலும் அறிய

நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

இந்த குழு 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துகிறது. அதனை முடித்தவுடன், தேர்தல் அறிக்கையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்கள், கோரிக்கைகளை கேட்டறிகின்றனர். அதன்படி இக்குழுவினர் முதல் சுற்றுப்பயணத்தை தூத்துக்குடியில் துவங்கினர்.


நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

இதில் தொழில் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், பெண்கள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் அளித்தனர்.திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நாளை கன்னியாகுமரியிலும், பிப்.7 ஆம் தேதி மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சையிலும், 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும், 11-ம் தேதி திருப்பூரிலும், 21, 22, 23 தேதிகளில் சென்னையிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கின்றனர்.


நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறுகையில், "வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர், தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழு நியமித்து உள்ளார். அந்த குழு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடியில் தேர்தல் அறிக்கை குழு முதன் முதலாக பணிகளை தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில் துறையினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

ராமநாதபுரத்தில் இருந்து மீனவர்கள், தென்னை விவசாயிகள், மிளகாய் விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். விருதுநகரில் இருந்து பட்டாசு தொழிலில் உள்ளவர்கள், தூத்துக்குடி உப்பு தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த கருத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இந்த குழு 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துகிறது. அதனை முடித்தவுடன், தேர்தல் அறிக்கையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் முதல்-அமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கையோடும், மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றும், மத்திய அரசு நல்ல அரசாக, மக்களை மதிக்க கூடிய அரசாக, மாநில உரிமைகளின் மீது நம்பிக்கை இருக்க கூடிய அரசாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் உள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும் - கனிமொழி எம்பி

மக்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக ஜி.எஸ்.டி.யில் பல குழப்பங்கள் உள்ளன. மாநில உரிமைகளை மதிப்பதும் இல்லை. தூத்துக்குடி, சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு கூட மத்திய அரசு எந்த நிதியுதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மக்கள், மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற உறுதியோடுதான் எங்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். பெரும்பாலும் தூத்துக்குடியை தொழில் மாவட்டமாக மாற்றுவதற்கு ரெயில், விமான நிலையம் விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம் போன்றவை முக்கியமான கோரிக்கையாக உள்ளது. மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று கழகத்தலைவர் மட்டும்தான் அறிவிக்க முடியும். அதன்படி முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Embed widget