மேலும் அறிய

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். நிலம் கையகப்படுத்தும் பணி குறைவாக இருந்தால், உடனடியாக பணிகள் தொடங்கப்படும்.

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் கோரம்பள்ளம் அருகே பாலம் பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு


தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே மேம்பாலம் அமைய உள்ள இடம், 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் அருகே அணுகு சாலை அமைக்கப்பட உள்ள  பகுதி, மாப்பிள்ளையூரணி பாலம் மற்றும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் மதுபாலன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது சேதம் அடைந்த 163 நெடுஞ்சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க முதல்-அமைச்சர் ரூ.140 கோடி நிதி ஒதுக்கினார். அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. நிரந்தரமாக 83 பணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

                                                                                            ஏரல் பாலம்


தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு

இதில் 37 பணிகள் முடிவடைந்து உள்ளன. 46 பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும். ஏரல் பாலம் சீரமைக்கும் பணிக்கு டென்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.


தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 2 பணிகளும் மேற்கொள்ளப்பட முடியாத நிலை இருந்து வருகிறது. அரசு சார்பில் மின்கம்பம் அகற்றுதல், குடிநீர் குழாய்களை மாற்றுதல், நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளனர். இதனால் தொடர்ந்து வழக்கு நடத்தி வருகிறோம். வழக்கு இறுதிகட்டத்துக்கு வந்து உள்ளது. வருகிற 17-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அரசை பொறுத்தவரை நியாயமான வாதத்தை எடுத்து வைத்து உள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். நல்ல தீர்ப்பு வந்த உடன் இந்த 2 பணிகளும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும்.


தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு... அப்டேட் தந்த அமைச்சர் எ.வ.வேலு

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் கோரம்பள்ளம் அருகே பாலம் பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 4 வழிச்சாலைகளில் மத்திய அரசு சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்கிறது. அதனால் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் மூலம் தமிழக அரசே 4 வழிச்சாலைகளை அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். நிலம் கையகப்படுத்தும் பணி குறைவாக இருந்தால், உடனடியாக பணிகள் தொடங்கப்படும். தூத்துக்குடி-மணியாச்சி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்படாமல் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. தற்போது, ஒரு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால், நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்து இருக்க வேண்டும், அதன்பிறகு திட்டமதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்படுகிறது. மணியாச்சி சாலை நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையடைந்த உடன் முன்னுரிமை அளித்து சாலை அமைக்கப்படும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Actor Karthi:
Actor Karthi: "நானும் பெருமாள் பக்தன்தான்" பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tobacco in Tirupati Laddu | ”திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட், சிக்ரெட்” மீண்டும் வெடித்த சர்ச்சைTirupati Devasthanams | புனிதத்தை மீட்க  திருப்பதி தேவஸ்தானம் செய்த செயல்Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Madras University Convocation: சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறை; துணைவேந்தர் இல்லாமலேயே நடந்த 166வது பட்டமளிப்பு விழா!
Actor Karthi:
Actor Karthi: "நானும் பெருமாள் பக்தன்தான்" பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
Breaking News LIVE, Sep 24: உடல்நிலையில் முன்னேற்றம் - சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் துரை தயாநிதி
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
இதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்... போட்டுடைத்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
TNPSC Group 2 Answer Key: டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு; செப்.30 வரை முறையீடு செய்யலாம்- எப்படி?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
Lubber Panthu : இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்...லப்பர் பந்து படத்தை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்
Lubber Panthu : இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்...லப்பர் பந்து படத்தை பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்? டாப்பில் இருக்கும் இந்திய வீரர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் யார்? டாப்பில் இருக்கும் இந்திய வீரர்
Embed widget