மேலும் அறிய

டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?

சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது

சுமோவில் தப்பிய கொள்ளையர்கள் திரைப்பட பாணியில் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த போலீசார் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் டீ சர்ட் வாங்கும்போது பேரம் பேசிய பிரச்சனையால் சிக்கியது எப்படி...?

சுமோவில் தப்பிக்க முயற்சி:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஐந்து நபர்கள் டீசர்ட் வாங்க சென்றுள்ளனர்.டீசர்ட் விலை 150 ரூபாய் என்று கடைக்காரர் கூறியவுடன் எங்கள் ஊரில் 50 ரூபாய்தான் அதிக விலைக்கு விற்கிறாயா? என கேட்டு அரிவாளை  காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடைக்காரர் இது குறித்து நாகப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசாரை பார்த்த ஐந்து பேரும் அவர்கள் வந்த டாடா சுமோவில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்  உள்ளிட்ட வாகனங்களில் டாடா சுமோவை தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர். டாட்டா சுமோ எங்கும் நிற்காமல் அதிவேகத்தில் வந்துள்ளது. மேலும் இடையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு நாகை போலீசார் தகவல் கொடுத்தும் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தும் அதில் இடித்துவிட்டு சுமோ எங்கும் நிற்காமல் வந்துள்ளது. போலீசாரும் திரைப்பட பாணியில் தொடர்ந்து சுமோவை 35 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்துள்ளனர். அப்போது சுமோ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடிக்கு வந்த போது சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது.


டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?
சுற்றி வளைத்த போலீஸ்:

அதனைத் தொடர்ந்து சுமோவிலிருந்து இறங்கிய ஐந்து நபர்களும் காட்டுப் பகுதிக்குள் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு தயார் நிலையில் இருந்த நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் காவல் ஆய்வாளர் விஜயா உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமை காவலர் கோபிநாத் காவலர் மனோ ஆகியோர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.மேலும் போலீசார் அவர்கள் வந்த டாடா சுமோவை சோதனை செய்தபோது அதில் கத்தி பாறை முகமூடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.


டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?
கொலை, கொள்ளைச் சம்பவங்கள்:

அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணையில் மதுரை மலையப்பப்பட்டியை சேர்ந்த கண்ணன் (23), மேலூர் வசப்பட்டியை சேர்ந்த பக்ருதீன் (30),மதுரை பொன்மேனியை சேர்ந்த பாண்டி(30), சிவகங்கை முனைப்பட்டியை  சேர்ந்த அஸ்வின் (30) மற்றும் தஞ்சையை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகியோர் மதுரை மற்றும் சிவகங்கை பகுதியில் கொலை கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் ஐந்து பேரும்  திருவாரூர் மாவட்ட போலீசாரால் கரூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget