மேலும் அறிய

திருவாரூர்: பயிர்க்காப்பீடு கேட்டு கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

மழை வெள்ள பேரிடரால் அழிந்த நெற்பயிர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு காப்பீட்டு தொகை கிடைக்காத கிராங்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு உதவியாக இருப்பது அரசின் பயிர் காப்பீடு திட்டம். இந்த நிலையில் ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப் பட்டதில் பல்வேறு கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவாரூர்: பயிர்க்காப்பீடு கேட்டு கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில மழை வெள்ள பேரிடரால் அழிந்த நெற்பயிர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு காப்பீட்டு தொகை கிடைக்காத கிராங்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், தொடர் மழையால் அழிந்த சம்பா, தாளடி மற்றும் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் அழிந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மழை பாதிப்பால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.


திருவாரூர்: பயிர்க்காப்பீடு கேட்டு கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தற்பொழுது பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் விவசாயிகளுக்கு 6000 மதிப்பிலான இடுபொருள்கள் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது. ஆகையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டூர் காவல் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்த விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வாங்கினர்.  விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில்  விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நைஜிரியாவில் இருந்து சென்னை வந்த நபருக்கு குடும்பத்தினருடன் ஒமிக்ரான் பரிசோதனை - மா.சுப்பிரமணியன் பேட்டி

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget