மேலும் அறிய

திருவாரூரில் தொடரும் மழை - அச்சத்தில் விவசாயிகள்..!

தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை என்பது இடைவிடாது பெய்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை என்பது அவ்வப்போது பெய்து வந்தது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கிய கனமழை என்பது இன்று காலை வரை தொடர்ந்தது. இந்தத் தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.  திருவாரூரில் தொடரும் மழை - அச்சத்தில் விவசாயிகள்..!

திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு நடந்து வரும் மறு பொதுத் தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வலங்கைமான் பகுதியில் 47.6 மில்லி மீட்டர் குடவாசல் பகுதியில் 40.2 மில்லி மீட்டரும் நன்னிலம் பகுதியில் 40 மில்லி மீட்டரும் மன்னார்குடியில் 32.2 மில்லி மீட்டரும் திருவாரூரில் 23.2  மில்லி மீட்டரும் நீடாமங்கலத்தில் 23.6  மில்லி மீட்டரும் பாண்டவயாற்றில் 21 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணைக்கு காவிரியில் இருந்து வர வேண்டிய நீர் வந்து சேராத காரணத்தினால் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதிக்கு முன்னரே திறக்கப்பட்டு விவசாயிகள் தற்போது குறுவை நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்


திருவாரூரில் தொடரும் மழை - அச்சத்தில் விவசாயிகள்..!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 49 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் கனமழை என்பது பருத்தி அறுவடை பணிகளை மிகவும் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் இறுதிகட்ட அறுவடை பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட கூடும் எனவும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் விற்பனை செய்வதற்கு கொண்டுவரப்படும் பருத்தி பஞ்சுகளை உடனடியாக அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்து அவர்களுடைய வங்கி கணக்கில் உடனடியாக பணத்தை வரவு வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(15-07-2026) எங்கெல்லாம் பவர் கட்? இதோ முழு லிஸ்ட்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget