மேலும் அறிய

கும்பகோணத்தில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிளுக்கு இளந்தமிழர் பயிற்சி பட்டறை

தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் மாநில அளவிலான இளந்தமிழர் பயிற்சி பட்டறை கடந்த 2013 ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  நடந்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 38 மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மாநில அளவிலான இளந்தமிழர் பயிற்சி பட்டறை நிறைவு விழா நடந்தது.

தமிழ் வளர்ச்சி த்துறை சார்பில் மாநில அளவிலான இளந்தமிழர் பயிற்சி பட்டறை கடந்த 2013 ஆண்டு முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  நடந்து வருகிறது. அதன்படி கும்பகோணம், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை ந.அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

கும்பகோணத்தில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிளுக்கு இளந்தமிழர் பயிற்சி பட்டறை

கடந்த ஒரு வாரமாக தினமும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப, தமிழோடு உறவாடுவோம், சங்க இலக்கியம்-கவிதையும் காட்சியும், சங்க இலக்கிய நயம், நாடகம் எனும் கலை வடிவம், புறநானூறு கூறும் செய்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் சம்பந்தபட்ட தலைப்புகளில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள், அறிவியல் அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் என 42 பேச்சாளர்கள் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கினர்.

இந்த பயிற்சியில் தமிழகத்தில் 38 மாவட்டகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மேலும் தங்களை மெருகேற்றிக் கொண்டனர். இந்த பயிற்சி பட்டறையின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் சத்தியபிரியா தலைமை வகித்தார்.

இந்த பயிற்சியின் போது பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவி மணி மொழி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதிஅரசு கலைக்கல்லூரி மாணவர் முனிய பிள்ளை விருதுநகர் மாவட்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி கனகலெட்சுமி ஆகிய 3 பேர் முதல்பரிசாக ரூ.5 ஆயிரம் தொகையும், சான்றிதழும் பெற்றனர்.  திருச்சி உருமு தனலெட்சுமிகல்லூரி மாணவன் பாலகணபதி, கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவன் ஸ்ரீபநாதன், திருவாரூர் ராபியம்மாள் அமகது மொய்தீன் கல்லூரி மாணவி நறுமுகை ஆகிய 3 பேர் 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். தூத்துக்குடி மாவட்டம் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஞானவேல், தருமபுரி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி சீதா, திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி(தன்னாட்சி)மாணவன் ராஜவேல் ஆகிய 3 பேர் 3- ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.

மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.  இந்த பயிற்சியில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மா,  அன்னை கல்வி குழும தலைவர் முனைவர் அன்வர் கபீர்,  அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, துணை முதல்வர் லயோலா பெரிஸ், அன்னை இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகா, தமிழ்வளர்ச்சி துறை அதிகாரி தானேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் இளஞ்செழியன், ரமேஷ்பாபு, செந்தில்குமார், செந்தில், ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget