மேலும் அறிய

உலக பாரம்பரிய வார கொண்டாட்டம்... தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

வார விழாவில் பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி, கருத்தரங்கம், பாரம்பரிய நடைபயணம், பாரம்பரிய சுற்றுலா, கல்லூரி மாணவர்களுக்கான வினா-விடை போட்டி நடக்கிறது.

தஞ்சாவூர்: உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொடக்கி வைத்தார்.

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் இன்று 19ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த ஒரு வார விழாவில் பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி, கருத்தரங்கம், பாரம்பரிய நடைபயணம், பாரம்பரிய சுற்றுலா, கல்லூரி மாணவர்களுக்கான வினா-விடை போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய விளக்கப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிகழ்வுகள், நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமையையும், பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணிக்கு முன்னதாக நையாண்டி மேளம், காளையாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி முதன்மையர் ஜெகன்மோகன், இந்திய தொல்லியல் துறை பாதுகாப்பாளர் விக்னேஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம், அரசு வேளாண் கல்லூரி, பெரியார் மணியம்மை கல்லூரி, வல்லம் அன்னை தெரசா பயிற்சி நிறுவனம் சார்ந்த 250 மாணவ, மாணவிகள் பாரம்பரிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உற்சாகமாக பங்கேற்றனர்.

தமிழ் பல்கலைக்கழக சுவடி மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் பவானி, உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், பெரியார் மணியம்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பாக்யராஜ், பாலரத்தினம், அன்னை தெரசா பயிற்சி நிறுவனம் இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் சிறப்பாக செய்திருந்தார்.

உலக பாரம்பரிய வாரம், நவம்பர் 19 முதல் நவம்பர் 25 வரை அனுசரிக்கப்படுகிறது, இது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய கொண்டாட்டமாகும். யுனெஸ்கோவின் தலைமையில் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI), இந்தியாவில் நிகழ்வை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. 2024 உலக பாரம்பரிய தினத்தின் கருப்பொருள் 'பன்முகத்தன்மையைக் கண்டறிந்து அனுபவியுங்கள்' என்பதாகும்.

இரண்டு பேரழிவுகரமான உலகப் போர்களைத் தொடர்ந்து தார்மீக மற்றும் அறிவுசார் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக 1945 இல் உலக பாரம்பரிய வாரம் உருவாக்கப்பட்டது. இது நீடித்த உலக அமைதியை ஆதரிக்கும் ஒரு வழியாகும். இந்த வாரம், பல ஆண்டுகளாக கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கொண்டாட்டமாக வளர்ந்துள்ளது, விலைமதிப்பற்ற வரலாற்று தளங்களைப் பாதுகாப்பதில் பங்கேற்க குடிமக்கள், சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்களை தீவிரமாக ஊக்குவிக்கிறது.

இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது, பல்வேறு சமூகங்களுக்கு இடையே மரியாதை மற்றும் புரிதலை ஊக்குவிக்கிறது.  விலைமதிப்பற்ற இடங்களைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது, வரவிருக்கும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

மனித பாரம்பரியத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஆழத்தை மதிக்கிறது. நமது பொதுவான மரபைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு உணர்வை வளர்ப்பதன் மூலம் இளைஞர்களை பாதுகாப்பாளர்களாக ஆக்குவதற்கு உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Embed widget