மேலும் அறிய

அட்ரா சக்க... அட்ரா சக்க... இனி பூச்சித் தொல்லை குறையுமா: வயல் தினவிழாவில் வேளாண் அதிகாரி சொன்னது என்ன?

11 வகையான உளுந்து, 9 வகையான பயிறு சாகுபடி செய்த விவசாயி நிலத்தில், வேளாண்மைத்துறையினர் வயல் தின விழா நடத்தி, பிற விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் 11 வகையான உளுந்து, 9 வகையான பயிறு சாகுபடி செய்த விவசாயி நிலத்தில், வேளாண்மைத்துறையினர் வயல் தின விழா நடத்தி, பிற விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். 

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் விவசாயி ஆர்.சரவணன் ஆனந்தன் என்பவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் சந்தனம், செம்மரம், மகாகனி, தென்னை ஆகிய மரங்களை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இதில் ஊடுபயிராக உளுந்து, பயிறு வகைகளை தற்போது சாகுபடி செய்துள்ளார்.

டெல்டா மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வெகுவாக மகசூல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வேளாண்மை துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை சார்பில் கான்பூரில் உள்ள இந்திய பயறு ஆராய்ச்சி நிலையம் வாயிலாக வெளி மாநிலங்களிலிருந்து சான்று பெற்ற 20 வகையான  உளுந்து, பயறு வகைகளின் விதைகள் வாங்கி தரப்பட்டது.

இதையடுத்து விவசாயி சரவணன் ஆனந்தன் வயலில் ஊடுபயிராக கர்நாடகா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் அதிக மகசூல் தரக்கூடிய எல்பிஜி 913, கேபியு 405, என்விஎல் 7, டி 9, எஸ்விஎம் 66, எல்ஜிஜி 600, எம்எச் 1762, டிசிஏடிஎம் 1, பியூஎஸ்ஏஎம் 9531, கோட்டா 5 உள்ளிட்ட ரகங்களை கொண்ட உளுந்து, பயிறு வகைகளை சாகுபடி செய்தார். இந்த பயிர்கள் அனைத்தும் கடந்த 30.4.2025 ல் விதை ஊன்றப்பட்டு, தற்போது காய்கள் காய்த்துள்ளது.

தொடர்ந்து வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை சார்பில் சரவணன் ஆனந்தன் வயலில் வயல் தின விழா கொண்டாப்பட்டது. அப்போது வேளாண் துறையினர், விதை உற்பத்தியாளர்கள், முன்னோடி விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் உளுந்து, பயிறு சாகுபடி முறைகள் குறித்து உதவி இயக்குநர் து.கோபாலகிருஷ்ணன் விளக்கமளித்தார். பின்னர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா கூறுகையில், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய பயிராகவும், குறைந்த அளவு சத்துகள் கொண்ட நிலங்களில் நன்கு வளர்ந்து, மகசூல் தரக்கூடியதாக உளுந்து, பயறு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 86,500 ஏக்கர் பரப்பளவில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயினால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வந்தனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் மத்திய அரசால் அறிவிக்க செய்யப்பட்ட ரகங்களை வெளிமாநிலங்களிருந்து கொண்டு வரப்பட்டது. முதற்கட்டமாக தஞ்சாவூர் கோட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு, பட்டுக்கோட்டை கோட்டத்தில் பைங்கால், கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் ஆகிய மூன்று இடங்களிலும் இந்த மாதிரி சாகுபடி திடல் அமைக்கப்பட்டுள்ளது. வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் விவசாயி சரவணன் ஆனந்தன் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 11 வகையான உளுந்து, 9 வகையான பயறு வகைகள் நன்றாக வளர்ந்துள்ளது.

இந்த உளுந்து, பயறு அனைத்தும் 60 லிருந்து 70 நாள் வயதுடையது. வாரம் ஒரு முறை நீர்பாசனம், களைக்கொல்லி மேற்கொண்டும், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தியும், மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 சித்திரை பட்டத்தில் இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள விதைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை வேளாண்மைத்துறையினர் செய்துள்ளனர் என்றார்.

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் மணிமாறன், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை பல்கலைக் கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மதிராஜன், விதை ஆய்வு துணை இயக்குநர் வி.சுஜாதா, வேளாண்மை வணிக பிரிவின் துணை இயக்குநர் ரா.சுதா, விதைசான்று அலுவலர்கள் க.பிரபு, எஸ்.ஹசீனாபேகம் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

வெல்ல ஆலைகள் மூடல்... கரும்பு விவசாயம் இனிக்குமா? அய்யம்பேட்டை விவசாயிகள் கவலை
வெல்ல ஆலைகள் மூடல்... கரும்பு விவசாயம் இனிக்குமா? அய்யம்பேட்டை விவசாயிகள் கவலை
602 மனுக்கள்... யார் யாருக்கு என்ன உதவி? மக்கள் குறைதீர் கூட்டத்தில் தஞ்சை கலெக்டர் அதிரடி
602 மனுக்கள்... யார் யாருக்கு என்ன உதவி? மக்கள் குறைதீர் கூட்டத்தில் தஞ்சை கலெக்டர் அதிரடி
மிலாடி நபி நாளில் டாஸ்மாக் கடைகள் மூடல்: தஞ்சையில் மதுபான விற்பனைக்கு தடை
மிலாடி நபி நாளில் டாஸ்மாக் கடைகள் மூடல்: தஞ்சையில் மதுபான விற்பனைக்கு தடை
“ஓவியம் முதல் மணல் சிற்பம் வரை... மாணவர்களின் திறமையை பார்த்து அசந்த கலெக்டர்”
“ஓவியம் முதல் மணல் சிற்பம் வரை... மாணவர்களின் திறமையை பார்த்து அசந்த கலெக்டர்”

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RATION CARD : ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
Rasi Palan Today (26-08-2026): மகரத்துக்கு லாபம்.. சிம்மத்துக்கு வரவு.. உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
Rasi Palan Today (26-08-2026): மகரத்துக்கு லாபம்.. சிம்மத்துக்கு வரவு.. உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Embed widget