மேலும் அறிய

இந்த வருடமாவது இனிக்குமா? கரும்பு விலை குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு: தோகை உரிக்கும் பணிகள் மும்முரம்

மழை தொடரவில்லை என்பதால் கரும்பு பயிர்கள் நன்கு வளர உதவியாக உள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்கி விடும் என்பதால் கரும்பு விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்: இந்த வருடமாவது இனிக்குமா? என்று கரும்பு சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எதற்காக தெரியுங்களா?

தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளில் தோகை உறித்தல் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை, வாளமரக்கோட்டை வளப்பக்குடி, மன்னார்சமுத்திரம், கூடநாணல், திருக்காட்டுப்பள்ளி, அடஞ்சூர், மடிகை, ஒரத்தநாடு, பாபநாசம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தற்போது கரும்பில் தோகை உரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பொங்கல் கரும்பை பொறுத்த வரையில் சாகுபடி செய்ய 10 மாத காலம் வரை ஆகும். சித்திரை மாதத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் ஜனவரி மாதத்தில் தான் அறுவடை செய்யப்படும். ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால் முதல் 3 உழவிற்கு பின்னர் சமன் செய்யும் கருவியை கொண்டு நிலத்தை சீரமைத்து பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களை அமைக்க வேண்டும்.


இந்த வருடமாவது இனிக்குமா? கரும்பு விலை குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு: தோகை உரிக்கும் பணிகள் மும்முரம்

நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.கரும்பு பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்த பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும். 6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதை பருக்களை சேகரிக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் காற்று புகாத வகையில் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.

முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5 x 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும்.

வெட்டுவதற்கு முன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும். கரும்பு 5 முதல் 7 மாத பயிராக இருக்கும் போது சாதாரணமாக 30 தோகைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10  தோகைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன.

மற்றவை சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த தோகைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாதவற்றை உரித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி சீராக இருப்பதோடு, மண்ணின் ஈரம் காக்கப்படுகிறது.

இவ்வாறு செய்வதால் கரும்பு சீராக அதே நேரத்தில அதிக வாளிப்புடன் வளரும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை கரும்பு பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும். மழை தொடரவில்லை என்பதால் கரும்பு பயிர்கள் நன்கு வளர உதவியாக உள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை தொடங்கி விடும் என்பதால் கரும்பு விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதை எடுத்து தஞ்சையை அடுத்து உள்ள சூரக்கோட்டை பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தோகை உரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தோகை உரிப்பது கரும்பின் அடிப்பகுதியை காற்றோட்டமாக வைத்து, பூச்சி தாக்குதல் மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது, இதனால் கரும்பின் தரம் மற்றும் சுவை அதிகரிக்கிறது.

மிகவும் சிரமப்பட்டு சாகுபடி செய்துள்ள பொங்கல் கரும்புகள் விலை நல்லபடியாக அமைந்து இந்தாண்டு விவசாயிகள் மனதை இனிக்க செய்ய வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget