மேலும் அறிய

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி

’’கடந்த 14 ஆம் தேதி உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். இதை சாப்பிட்டு ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது’’

நாகையை அடுத்த பாப்பாக்கோவில், ஏறும்சாலை கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் (39). விடுதலை சிறுத்தைகள் கட்சி பாப்பாக்கோவில் கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி அனுசுயா (35).இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் 2 மகள்கள், ஒரு  மகன் உள்ளனர். 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி  அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த  நாகை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  சம்பவ இடத்துக்குச் சென்று பிரேதத்தை  கைப்பற்றி  பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து,போலீசார் ராஜ்குமார் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
இதில் ராஜ்குமாரின் மனைவி  அனுசுயா இவரது தாயார் நிர்மலா (60) ஆகியோர் இணைந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமாருக்கு  குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. பல முறை சமாதானம் ஏற்பட்டும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் கோபமடைந்த மனைவி, மாமியார் ஆகிய இரண்டு பேரும்.
 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
சேர்ந்து கடந்த 14ம் தேதி உணவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளைகலந்து கொடுத்தனர். இதை சாப்பிட்டு ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த  மண்ணெண்ணையை  ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 
 
 

 

தைப்பூசத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலன் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பெரும் தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
 
 
நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிங்கார வேலவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலம் என பக்தர்களால் போற்றப்படும் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் இருந்துதான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய வேல் நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி சென்றதாக புராணங்கள் கூறுகிறது. புகழ்பெற்ற இவ்வாலயத்தில் பழனி முருகன் ஆண்டி கோலத்தில் இருந்தபோது சிவபெருமான் ஞானவேல் வழங்கிய தினமான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு .
 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
சிக்கல் சிங்காரவேல வருக்கு இன்று விடியற்காலை மூலமந்திர சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து யாகசாலையில் இருந்து கலச நீர் எடுத்து வரப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தீப ஆராதனைகள் நடைபெற்றன கொரானா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கோவில் குளத்தில் நடைபெறும்  தெப்ப உற்சவம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget