மேலும் அறிய

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி

’’கடந்த 14 ஆம் தேதி உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். இதை சாப்பிட்டு ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது’’

நாகையை அடுத்த பாப்பாக்கோவில், ஏறும்சாலை கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் (39). விடுதலை சிறுத்தைகள் கட்சி பாப்பாக்கோவில் கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி அனுசுயா (35).இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் 2 மகள்கள், ஒரு  மகன் உள்ளனர். 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி  அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த  நாகை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  சம்பவ இடத்துக்குச் சென்று பிரேதத்தை  கைப்பற்றி  பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து,போலீசார் ராஜ்குமார் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
இதில் ராஜ்குமாரின் மனைவி  அனுசுயா இவரது தாயார் நிர்மலா (60) ஆகியோர் இணைந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமாருக்கு  குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. பல முறை சமாதானம் ஏற்பட்டும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் கோபமடைந்த மனைவி, மாமியார் ஆகிய இரண்டு பேரும்.
 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
சேர்ந்து கடந்த 14ம் தேதி உணவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளைகலந்து கொடுத்தனர். இதை சாப்பிட்டு ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த  மண்ணெண்ணையை  ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 
 
 

 

தைப்பூசத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலன் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பெரும் தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
 
 
நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிங்கார வேலவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலம் என பக்தர்களால் போற்றப்படும் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் இருந்துதான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய வேல் நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி சென்றதாக புராணங்கள் கூறுகிறது. புகழ்பெற்ற இவ்வாலயத்தில் பழனி முருகன் ஆண்டி கோலத்தில் இருந்தபோது சிவபெருமான் ஞானவேல் வழங்கிய தினமான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு .
 

குடிப்பழக்கத்தால் தகராறு - கணவனை தனது தாயுடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி
 
சிக்கல் சிங்காரவேல வருக்கு இன்று விடியற்காலை மூலமந்திர சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து யாகசாலையில் இருந்து கலச நீர் எடுத்து வரப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தீப ஆராதனைகள் நடைபெற்றன கொரானா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கோவில் குளத்தில் நடைபெறும்  தெப்ப உற்சவம் ரத்து செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget