மேலும் அறிய

வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்: ஹெச். ராஜா எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, எந்த ஒரு காவல்துறை அதிகாரியாவது அத்துமீறினால், அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, எந்த ஒரு காவல்துறை அதிகாரியாவது அத்துமீறினால், அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், பா.ஜ., மற்றும் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்க மாட்டோம். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.

10 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை
 
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மடத்துத்தெருவில், இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 10 அடி உயரத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருத்தினராக பா.ஜ.,தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துக்கொண்டார். விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத், இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, நடிகை கஸ்துாரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

பழநியில் நடந்தது ஆன்மிக மாநாடு இல்லை

பின்னர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நுாறு சதவீத இந்து விரோத தீய அரசாங்கம் நடக்கிறது. சனாதான தர்மம் என்றால் அது இந்து மதம் தான் என உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது. பழநியில் நடந்தது ஆன்மிக மாநாடு இல்லை என அமைச்சர் உதயநிதி பேசினார். அந்த மாநாடு இந்து விரோத மாநாடு தான். முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அரசு பணத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா

தமிழக முதல்வர் .ஸ்டாலின் அரசு பணத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, எந்த ஒரு காவல்துறை அதிகாரியாவது அத்துமீறினால், அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், பா.ஜ., மற்றும் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்க மாட்டோம். நாங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். சனாதன இந்து மதத்திற்கு எதிரி அமைச்சர் உதயநிதி. அவர் மீது அனைத்து மாநிலங்களிலும் வழக்கு உள்ளது. மூத்த அமைச்சர்கள் எல்லாம் இந்த இந்து விரோத உதயநிதியின் அடிமைகள். 

பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

தமிழகத்தில் மொழி கொள்கை தொடர்பாக படிக்கின்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். கிராவல் மண் கொள்ளையடித்த வழக்கில் உள்ள ஊழல் பேர்வழி அமைச்சர் பொன்முடி மொழிகளைப் பற்றி முடிவு எடுப்பதற்கு யார்?.  பொன்முடிக்கு முதுகெலும்பு இருந்தால் வேளச்சேரியில், இந்தியும், சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கும், முதல்வர் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியை இழுத்து மூட முடியுமா?. முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வி இல்லை. அப்படி என்றால், நீங்களே, கருணாநிதியை, மதிக்கவில்லை என்று அர்த்தம்.

சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள்

மொழிக்கொள்கையில் பிடிவாதம் பிடித்தால், திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளி வாசலிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம். முதலில் அதை எல்லாம் சமச்சீர் கல்வியாக மாற்றுங்கள். மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்க வேண்டும். ஒரு மொழியை படிக்க கூடாது என தடுப்பது ஒரு திணிப்புதான். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget