மேலும் அறிய

கிடுகிடுவென்று விலை உயர்ந்த பூக்கள்... எதனால் இப்படி உயர்ந்தது?

கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. ஆனால் இன்று விலை உயர்ந்து கிலோ ரூ.750 முதல் 1000 வரை  விற்கப்பட்டது.

தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சையில் 2வது நாட்களாக பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் மேலும் விலை உயர்ந்துள்ளது.

முழு முதற்கடவுள்... கணங்களின் அதிபதி

விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது. 'கணபதி' என்ற சொல்லுக்கு 'தேவகணங்களின் தலைவன்' என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். 'தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்' என்பதே விநாயகர் என்ற பெயருக்கு பொருள். விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். இப்படி விநாயகருக்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன.

பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், பூக்கார தெரு ஆகிய இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கிருந்தும் வியாபாரிகள் மொத்தமாக பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். ஏராளமான பொதுமக்களும் தங்கள் தேவைக்கேற்ப பூக்கள் வாங்கி செல்வர்.


கிடுகிடுவென்று விலை உயர்ந்த பூக்கள்... எதனால் இப்படி உயர்ந்தது?

பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகம் இருப்பதால் அந்த சமயங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை உயரும். தற்போது ஆவணி மாதம் என்பதால்  நேற்று மற்றும் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின்  தேவையும் அதிகரித்துள்ளது. தங்கத்திலேயே விநாயகர் சிலை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாம் நாள் நீரில் கரைப்பது மிகச் சிறந்தது என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு தான். வாசலில் இருக்கும் களிமண்ணில் விநாயகரை பிடித்து வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அருகம்புல்லையும், எருக்கம் பூ மாலையையும் சாத்தி எளிதாக வழிபடக்கூடிய வழிபாடாகும்.

இவ்வுலகமும் உடலும் பஞ்சபூதங்களால் ஆனது தான். அதேபோல் ஒவ்வொரு தெய்வமும் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டுள்ளது. அந்த வகையில் விநாயகர் மண் பஞ்சபூதத்தின் தன்மையை கொண்டவர். அதனால்தான்  விநாயகர் வழிபாட்டிற்கு மண் பிள்ளையார் வழிபாடு சிறப்பாக கூறப்படுகிறது. இப்படி மண்ணால் செய்யப்பட்டு விழாவாக கொண்டாடப்பட்டு பிறகு ஆற்றில் கரைக்கப்படுவது உற்பத்தி செய்யப்பட்ட இடத்திற்கே சேர்வதை  குறிக்கிறது .அதாவது” தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே ” என்பதே இதன் தத்துவமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு உயிர்களும் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சேர்வதையே விநாயகர் சதுர்த்தி உணர்த்திச் செல்கிறது .

மல்லிகைப்பூக்கள் விலை இரண்டு மடங்கு  உயர்வு

அத்தகைய சிறப்பு மிகுந்த விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. ஆனால் இன்று விலை உயர்ந்து கிலோ ரூ.750 முதல் 1000 வரை  விற்கப்பட்டது. கனகாம்பரம் பூ கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு  விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் முல்லை கிலோ ரூ.750 முதல் ரூ.1000, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.200, ஆப்பிள் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பூக்கள் வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தற்போது ஆவணி மாதம் என்பதால் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம். இந்த நாட்களில் திருமுணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இன்று, நாளை என தொடர்ந்து 2 நாட்கள் சுபமுகூர்த்தம் மற்றும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தாலும் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமாகவே உள்ளது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Embed widget