மேலும் அறிய

'மத்திய அரசே தோல்வியை ஒப்பு கொண்டது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’... திருமாவளவன் அறிவுறுத்தல்!

நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்: நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள மறியல் பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை, டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"நீட் தேர்வு செயல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதை பாஜக ஒப்புக் கொண்டு, தேர்வு எழுதி இருந்தால் போதும், தேர்ச்சி பெறத் தேவையில்லை என அறிவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே, அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜக முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது. காவிரி பிரச்னையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்துக்கு எதிராக இல்லை என காட்டிக் கொள்கிறது. இந்த இரட்டைப் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.


மத்திய அரசே தோல்வியை ஒப்பு கொண்டது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’... திருமாவளவன் அறிவுறுத்தல்!

அதிமுகவும், பாஜகவும் அரசியல் நாடகம் நடத்துகிறது. இரு கட்சிகளும் கூட்டணியை ஒரு போதும் முறித்துக் கொள்ளாது. அதிமுகவை நம்பி பாஜக உள்ளது. அதேபோல்தான் பாஜகவை நம்பி அதிமுக இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் தணித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை. பாஜகவை அதிமுக சுமப்பதால், அக்கட்சி வாக்கு வங்கியை மேலும் இழக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது. இதையடுத்து நீட் தேர்வு தோல்வி என்பதை மத்திய அரசு ஒத்துக் கொண்டு விட்டது என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் வரும் 2024ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடிவுகள், ஜூன் 2வது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்தநிலையில், 3வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ’நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் (மருத்துவம்/ பல் மருத்துவம்) என்பது விண்ணப்பத்தாரர்களின் கலந்தாய்வில் அனைத்து வகைகளிலும் பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்துதான் அனைத்து கட்சியினரும் நீட் தேர்வு தோல்வி என்பதை மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தல் வலுவாக எழுந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget