மேலும் அறிய

திருப்பத்தூர் பஸ் விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள். 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்: திருப்பத்தூர் அரசு பேருந்து விபத்து மற்றும் புயல் மழையினால் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் போக்குவரத்து நகர் கிளை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் அஞ்சலி கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து நகர் கிளை முன்பு இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு பேருந்து விபத்து மற்றும் புயல் மழையினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.  சிஐடியு நிர்வாகி முன்னிலை ராமசாமி வகித்தார்.இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள். 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 அறிவித்துள்ளது.

அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் பத்து லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும், காயமடைந்த வர்களுக்கு ரூபாய்     ஒரு லட்சம் வழங்க வேண்டும்.  டிட்வா புயல்-மழையினால் உயிரிழந்தவர்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மேலும் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் முப்பதாயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓவர் டைம் டியூட்டி மற்றும் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கக் கூடாது என்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன்,  ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வெ.சேவையா, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு, தொழிலாளர்கள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ் , விசிக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் செயலாளர் க.தமிழ்முதல்வன், என்டிஎல்எப் மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், போக்குவரத்து அம்பேத்கர் சங்க நிர்வாகி சேகர், டிஎம்எம்கே முன்னாள் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஜீவா,தமாகா சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் சிங்காரம், மணிகண்டன், ராஜமன்னன், அறிவழகன், செந்தில் உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் விபத்தில் பலியானவர்களுக்கும், புயல் மழையினால் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget