மேலும் அறிய

திருவாரூர் விவசாயிகளிடம் அதிகவிலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள்...!

’’அதிகபட்சமாக ஒரு கிலோ பருத்தி விலை 87 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இதுவரை 45 ஆயிரம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது’’

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முதன்மையான சாகுபடியாகும். ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சாகுபடி அளவின் பரப்பு படிப்படியாக குறைந்து வந்து தற்போதைய நிலையில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல் சாகுபடியை தவிர்த்து குறைந்த அளவு தண்ணீரில் செய்ய கூடிய பருத்தி சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கினர். குறிப்பாக பண பயிரான பருத்தி சாகுபடியில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் சரசு கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 5500 ரூபாய்க்கு இந்திய பருத்தி கழகம் சார்பில் கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது குறிப்பாக திருவாரூர், மூங்கில்குடி ,குடவாசல், வலங்கைமான், ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக பருத்தி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்திய பருத்தி கழகம் பருத்தி மறைமுக ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக தேனி, திருப்பூர், கும்பகோணம், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் தனியார் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்து வருகிறார்கள்.


திருவாரூர் விவசாயிகளிடம் அதிகவிலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள்...!

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 17 வாரங்கள் மறைமுக பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகபட்சமாக இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 8,550 ரூபாய்க்கு விலை போயுள்ளதாகவும் இதுவரை மாவட்டத்தில் 45 ஆயிரம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது வேளாண்மைக்கு என்று அறிவித்த தனி பட்ஜெட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மட்டுமல்லாமல் துணை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலமாக விவசாயிகள் தங்களது பருத்தியை எளிதில் விற்பனை செய்வதற்கு வாய்ப்பாக அமைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் அரசு தெரிவித்துள்ளார்.


திருவாரூர் விவசாயிகளிடம் அதிகவிலைக்கு பருத்தியை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள்...!

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்காண்டு பருத்தி உற்பத்தி செய்து நாங்கள் தனியார் நபர்களிடம் விற்பனை செய்து வருவதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ பருத்தி 87 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம். இதுவரை இவ்வளவு விலைக்கு நாங்கள் விற்பனை செய்ததில்லை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதேபோன்று ஆண்டுக்காண்டு பருத்தியை அதிக விலைக்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிராமப்புறங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget