மேலும் அறிய

குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது - மாணவர்கள் போராட்டம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கட்டிட வசதி இல்லாமல் குடவாசலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி செயல்பட்டு வருகிறது

குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி குடவாசல் பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்  புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கட்டிட வசதி இல்லாமல் குடவாசலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடவாசல் கல்லூரிக்கு புதிய கட்டிட வசதி கட்டி தர வேண்டும் பேராசிரியர்களின் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடவாசலில் செயல்பட்டு வரும் கல்லூரியை கொரடாச்சேரி அருகே செல்லூர் பகுதியில் மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடவாசல் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியை அதே பகுதியில் செயல்படுத்த வேண்டும் மேலும் கல்லூரிக்கு புதிய கட்டிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.


குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது - மாணவர்கள் போராட்டம்

மேலும் பேராசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடவாசல் பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மாணவர்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குடவாசல் அரசு கல்லூரி மாணவர்கள் இந்த கல்லூரிக்கு கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் என்கிற பகுதியில் இடம் பார்க்கப்பட்டு வருகின்ற 30ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. இதற்கு மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் நன்னிலம் தொகுதிக்கு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட இந்த கல்லூரி குடவாசல் ஒன்றியத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் எனவும் செல்லூரில் இந்த கல்லூரி கட்டிடம் கட்டப்படவிருப்பதால் தங்களுக்கு போதிய போக்குவரத்து வசதி போன்றவை இல்லை எனவும் கூறி அந்த கல்லூரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திருவாரூர் விளமல் பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தனர்.  இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மாணவர்களை உள்ளே விடாமல் தடுத்ததால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் ஆட்சியர் அலுவலக கேட்டின் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 


குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது - மாணவர்கள் போராட்டம்

இதற்கு மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்களை சந்தித்து உரிய விளக்கம் அளித்தால் தான் கலைந்து செல்வோம் என்று  கூறி அங்கே அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தங்களது கோரிக்கைகளை உரிய முறையில் மனுவாக எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும் அதற்கு இரண்டு நாட்களில் உரிய பதில் அளிப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக கைவிட்டு கலைந்துசென்றனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்தப் போராட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற் கதவுகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மீண்டும் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget