மேலும் அறிய

நாய்களிடம் சிக்கிக்கொண்ட மயில்.. காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..

திருவாரூர் மாவட்டத்தில் நாய்களிடம் சிக்கிக்கொண்ட மயிலை, ஆறாம் வகுப்பு படிக்கும்  சிறுவன் அக்கறையுடன் காப்பாற்றி இருப்பது என்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டை பெற்றுவருகிறது.

நாய்களிடம் சிக்கி கொண்ட மயிலை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 

நாடு முழுவதும் தேசிய பறவையான மயில் என்பது அழிந்து வரக்கூடிய ஒரு இனமாகவும் அதே சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பறவை இனமாகவும் இருந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சாகுபடி என்பது பெரும்பான்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் அருகில் உள்ள இடங்களில் இந்த மயில்கள் என்பது அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிடும் காலங்களில் மயில்கள், அதனை தங்களுக்கு இரையாக பயன்படுத்திக் கொள்வதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக சில விவசாயிகள் மயில்களுக்கு விஷம் வைப்பதனாலும், அடித்து துன்புறுத்துவதனாலும் மயிலினம் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நொடிகளை எடுத்து தேசிய பறவையான மயிலினத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாய்களிடம் சிக்கிக்கொண்ட மயிலை ஆறாம் வகுப்பு படிக்கும்  சிறுவன் சமூக அக்கறையுடன் காப்பாற்றி இருப்பது என்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டை பெற்று வருகிறது.


நாய்களிடம் சிக்கிக்கொண்ட மயில்.. காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சின்னகரம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் 11 வயதுடைய தீனதயாளன். இவர் கும்பகோணம் லிட்டில் பிளவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுவன் வீட்டிற்கு அருகில் உள்ள வயல் வெளியில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு ஒரு பெண் மயிலை கடித்து சித்ரவதை செய்வதை பார்த்துள்ளான். இதனைப் பார்த்த சிறுவன் தீனதயாளன் உடனடியாக நாய்களை விரட்டிவிட்டு அந்த மயிலை நாய்களிடமிருந்து காப்பாற்றியதுடன் அந்த மயிலை எடுத்துக்கொண்டு தனி ஆளாக வலங்கைமான் காவல் நிலையத்திற்கு வந்து மயிலை நாய் கடித்து விட்டது என்று கூறியதுடன் அதனை தான் காப்பாற்றி இங்கு கொண்டு வந்ததாகவும் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் மயிலை ஒப்படைத்துள்ளார். 


நாய்களிடம் சிக்கிக்கொண்ட மயில்.. காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..

சிறுவனின் இந்த செயலைக் கண்டு ஆச்சரியப்பட்ட காவல்துறையினர்  திருவாரூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுவனிடம் இருந்து மயிலை பெற்றுக் கொண்டனர். மயிலுக்கு கால்நடை மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்த பின்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்படும் என்று திருவாரூர் வனத்துறையினர்  தெரிவித்தனர். இந்த சிறுவயதில் ஒரு உயிரினத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையும் அதேசமயம் அது தேசிய பறவை என்பதால் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்கிற அறிவும் உடைய அந்த சிறுவனை வலங்கைமான் காவல்துறையினர் மட்டுமல்லாது அப்பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

மேலும் 11 வயதுடைய சிறுவன் சமூக அக்கறையுடன் மயிலை காப்பாற்றி உள்ள சம்பவம் என்பது அப்பகுதியில் உள்ள பலரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பதுடன் அவர்களுக்கு தேசிய பறவையான மயிலை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் மாவட்டம் முழுவதும் விளை நிலங்களுக்கு  அருகில் வசிக்கும் மயில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
தஞ்சாவூர் வயல்களில் வாத்து மேய்ச்சல்: இயற்கை உரம், அதிக லாபம் தரும் தொழில்! விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் வயல்களில் வாத்து மேய்ச்சல்: இயற்கை உரம், அதிக லாபம் தரும் தொழில்! விவசாயிகள் மகிழ்ச்சி
குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது... தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது... தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MNM quits Election 2026: 2தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
MNM quits Election 2026: 2தொண்டர்களுக்காக தேர்தலில் போட்டியில்லை.. ஆனால் கூட்டணி தர்மம்? ட்விஸ்ட் வைத்த கமல்
DMK DMDK Seat Sharing: திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
திமுக - தேமுதிக இடையே கையெழுத்தான தொகுதி உடன்பாடு; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு.?
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
AIADMK Election Manifesto: மகளிருக்கு ஃப்ரிட்ஜ் இலவசம், மதுவிலக்கு... அதிமுக இறுதி தேர்தல் அறிக்கை- இதோ 297 அறிவிப்புகள்
US Iran War Trump Modi: மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
மத்திய கிழக்கு போர், ஹார்முஸ் பிரச்னை; பிரதமர் மோடியுடன் பேசிய ட்ரம்ப்; இருவரும் விவாதித்தது என்ன.?
Strait of Hormuz: எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
எங்க ரூட்டே வேற; ஹார்முஸை கூலாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; போரொல்லாம் எங்கள ஒன்னும் பண்ணாது.!
GOLD SILVER RATE Mar. 24th: இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இப்படி ஆட்டம் காட்டுனா எப்படி.? காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு.?
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
EPS Campaign Date : நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
நாளை முதல் களத்தில் இறங்கும் எடப்பாடி பழனிசாமி.! எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம்.? வெளியான முழு லிஸ்ட்
Embed widget