மேலும் அறிய

திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை

உடனடியாக தண்ணீர் வடியவில்லை என்றால் பயிர்கள் அனைத்தும் அழுகி செலவு தொகையை முழுவதுமாக தங்களுக்கு கிடைக்காமல் போகும் என விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மேலூரில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மழை விட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 86.4 மில்லி மீட்டரும் மன்னார்குடி மற்றும் வலங்கைமான் பகுதிகளில் தலா 42.2 மில்லி மீட்டரும் குடவாசல் பகுதியில் 18.6 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 25.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.

திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை
 
இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நினைந்தால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கு காட்டி அரசு அதிகாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேநேரத்தில் இனிமேல் அறுவடை செய்ய உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் விளை நிலங்களிலேயே மழை நீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உடனடியாக தண்ணீர் வடியவில்லை என்றால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை உருவாகும். ஆகையால் தாங்கள் செய்த செலவு தொகையை முழுவதுமாக தங்களுக்கு கிடைக்காமல் போகும் என தங்களது வேதனையை விவசாயிகள் பதிவு செய்கின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களைக் கண்டெடுத்து அரசின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget