மேலும் அறிய

திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை

உடனடியாக தண்ணீர் வடியவில்லை என்றால் பயிர்கள் அனைத்தும் அழுகி செலவு தொகையை முழுவதுமாக தங்களுக்கு கிடைக்காமல் போகும் என விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மேலூரில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக மழை விட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 86.4 மில்லி மீட்டரும் மன்னார்குடி மற்றும் வலங்கைமான் பகுதிகளில் தலா 42.2 மில்லி மீட்டரும் குடவாசல் பகுதியில் 18.6 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 25.6 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.

திருவாரூரில் விடிய விடிய கனமழை - நீரில் மூழ்கிய பயிர்களால் விவசாயிகள் வேதனை
 
இந்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நினைந்தால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை கணக்கு காட்டி அரசு அதிகாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேநேரத்தில் இனிமேல் அறுவடை செய்ய உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் விளை நிலங்களிலேயே மழை நீரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உடனடியாக தண்ணீர் வடியவில்லை என்றால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை உருவாகும். ஆகையால் தாங்கள் செய்த செலவு தொகையை முழுவதுமாக தங்களுக்கு கிடைக்காமல் போகும் என தங்களது வேதனையை விவசாயிகள் பதிவு செய்கின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களைக் கண்டெடுத்து அரசின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget