மேலும் அறிய

திருவாரூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; குழந்தைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி போராட்டம்

எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது அப்படி அகற்ற முன்வந்தால் எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். இல்லையேல் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை கோரையாறு படித்துறை முதல் அண்ணா சிலை வரையிலான நீர்நிலைகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் அப்பகுதியில் மாடி வீடுகள் முதல் கூரை வீடுகள் வரை மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் ஏராளமான கடைகள் என சுமார் 105 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அதன்படி அனைவரும் கால அவகாசம் கொடுத்து ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள அதிகாரிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


திருவாரூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; குழந்தைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி போராட்டம்

ஆனாலும் அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை கண்டு கொள்ளாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த 2022 மார்ச் 25ஆம் தேதி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வந்தபோது குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல் கட்டமாக குடியிருப்புகள் முன்பு உள்ள தடுப்புகளை மட்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிவிட்டு சென்றனர். அதன் பின்னர் வழக்கு தொடர்ந்த ராஜ்குமார் மீண்டும் நீதிமன்றம் சென்றதை அடுத்து கடந்த ஜூலை 27ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி நாங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று கூறினர். அதன்படி நான்கு வீடுகள் முன்பு இருந்த காம்பவுண்ட் சுவர்கள் மூன்று கூரை கொட்டகை, இரண்டு தகர கூரைக் கொட்டகை ஆகியவை மட்டும் அகற்றப்பட்டது.


திருவாரூர்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; குழந்தைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி போராட்டம்

இதனை அடுத்து வழக்கு தொடர்ந்து உள்ள ராஜ்குமார் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி கண்டிப்பாக முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முதல் கட்டமாக மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப் போகிறோம். அதனால் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் சென்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் தாங்கள் குழந்தைகள் படிக்கும் ஆலங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு சுமார் 20 குழந்தைகளுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது அப்படி அகற்ற முன்வந்தால் தங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும். இல்லையேல் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மகன் இருவர் மயக்கம் அடைந்து சம்பவ இடத்தில் விழுந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அரசு அதிகாரிகள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் ஆய்வாளர் ராஜேஷ் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனுமதி அளிக்க மாட்டோம் என கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Harley-Davidson X440 S Vs RE Guerrilla 450: மோதிப் பார்த்துடுவோம் வா.! ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
Embed widget